ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales) Podcast

ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள் (Ainkaran Folktales)

Raja Nagarajan
Ainkaran, popularly known as Ganesha, is a very popular God among all age groups. This podcast uses Ainkaran as a Narrator for telling Folklores and Fables from all parts of the world . These have been passed on from generation to generation through word of mouth. Hence,these are called”கர்ணபரம்பரை கதைகள்” Email your comments to: [email protected]
இரு நூற்றி ஒன்றாவது கதை: காலி பூந்தொட்டி: The Empty Flowerpot
இது ஒரு சீன நாட்டுக் கதை. ஒரு சிறு பையனைப் பற்றிய கதை. இந்த பையன்,நேர்மைக்கு உதாரணம். எந்த சூழ் நிலையிலும்,அவன் தப்பான செயல்கள் செய்யாமல், நேர்மையாக இருந்தான். அதற்கு அவனுக்கு கிடைத்த வெகுமதி என்ன? உங்களால்,கற்பனை பண்ண முடியாத பரிசு.. அது என்ன? கதையை கேளுங்கள்...
Jun 7, 2024
13 min
இரு நூறாவது கதை: தோல் பை (The Leather Bag)
இது ஒரு கொரியா நாட்டுக்கதை. ஒரு கொரியா நாட்டு பணக்காரரின் ஒரே மகன்- ஜின்.ஒவ்வொரு நாள் இரவும்,அவன் அப்பாவின் வேலைக்காரன் - கிம்- ஒரு கதை சொல்வான். அந்த கதைகளை ஜின் யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டான். அவன் சுயநலம்,அவனுக்கு பெரிய ஆபத்தை கொண்டு வந்தது. கிம் அவனை காப்பாற்றுகிறான். ஜின்னுக்கு அப்படி என்ன ஆபத்து? கிம் எப்படி அவனை காப்பாற்றினான்? கதையை கேளுன்கள்.......
Apr 3, 2024
18 min
நூற்றி தொண்ணூத்தி ஒன்பதாவது கதை:அலை (The Wave)
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. ஜப்பான் தேசத்து கிராமம் ஒன்றில் ஒரு கோவில் இருக்காம். அதில் வழிபடும் தேவன், ஹோகே ஹாமா கூச்சி,என்ற ஒரு வயதான புத்திசாலியான,கருணை உள்ளம் படைத்த மனிதர். அவரை மரியாதயாக ஓஜிசான் (Grandfather) தாத்தா என்று தான் அழைப்பார்கள். கடவுளாக கும்பிட,அப்படி என்ந செயதார்? கதையை கேளுங்கள்....
Mar 27, 2024
13 min
நூற்றி தொண்ணூத்தி எட்டாவது கதை:சுண்டெலி சூத்திரம் (The Mouse Sutrra)
இது ஒரு ஜப்பானிய நாட்டுக் கதை. மந்திரங்கள் சொல்லி வழிபடுவது எல்லா மதங்களிலும் உண்டு. அர்த்தம் தெரிந்தோ தெரியாமாலோ முழு நம்பிக்கையோடு சொன்னால், அதற்கு பலன் கிடைக்கும்' என்று ஒரு நம்பிக்கை. இந்த கதையில் ஒரு பாட்டி , ஒன்றும் தெரியாத ஒரு புத்த சன்னியாசியிடமிருந்து அர்த்தமில்லாத சூத்திரத்தை (மந்திரத்தை) கற்று கொண்டு ,நம்மிக்கையோடு ஜபிக்கிறாள்.' அவளுக்கு பலன் கிடைத்ததா? கதையை கேளுங்கள்....
Mar 20, 2024
11 min
நூற்றி தொண்ணூத்தி ஏழாவது கதை: ஒரு தங்க கட்டியும் 2 நண்பர்களும் (A Golden Nugget and Two Friends)
இது ஒரு சீன நாட்டுக் கதை. டாமன்-பிதியாஸ் மாதிரி சீன தேசத்தி ல்,2 நண்பர்கள்- கீ வூ-பா ஷூ -இருந்தார்கள். அவர்கள்,இணைபிரியாமல். ஒரு போதும், சண்டை போடாமலும் வாக்குவாதம் செய்யாமலும் இருந்தார்கள். அவர்கள்,வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது கேட்க போகிறீர்கள். கதையை கேளுங்கள்.....
Mar 13, 2024
10 min
நூற்றி தொண்ணூத்தி ஆறாவது கதை:ட்ரவுசர் முகமதும் சுல்தானின் மகளும் ( (Trouser Mohamed and Sultan's Daughter))
இது ஒரு அரேபிய நாட்டுக் கதை. முகமது ஒரு ஏழை.அழகானவன்.புத்திசாலி. அவன் அப்பா,அவனுக்கு விட்டு போன சொத்து ஒரு தொள தொள ட் ரொவுசர்.பேண்ட்- அதை ஒரு சாக்காக மாற்றி போர்டர் வேலை செய்கிறான். ஒரு நாள், சுல்தானின் மகளை பார்க்கிறான்.அவளுக்கும் அவனை பிடித்திருந்தது. சுல்தான் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேட ஒரு புதிர் போட்டி நடத்துகிறார். முகமதும் அதில் கலந்து கொள்கிறான் .அவன் வெற்றி பெற்றானா? கதையை கேளுங்கள்....
Mar 6, 2024
15 min
நூற்றி தொண்ணூத்தி ஐந்தாவது கதை:சபாத் சிங்கம்(The Sabbath Lion)
இது அல்ஜீரியா நாட்டில் வசித்த ஒரு யூத குடும்பத்தை பற்றிய கதை. சபாத் தினம்(Sabbath day) யூதர்களுக்கு ஒரு முக்கியமான நாள். அது ஒவ்வோரு வாரமும், வெள்ளி கிழமை மாலையிலிருந்து சனி கிழமை மாலை வரை கொண்டாடப்படுகிறது. அன்று யூதர்க ஒய்வொடுத்து கொண்டு , கடவுள் பிரார்த்தனைகளில் நேரத்தை செலவழிப்பார்கள். நம்பிக்கையோடு செயபவர்களுக்கு கடவுள் அருள் கிடைக்கும் என்று நம்பிக்கை. அப்படி நம்பின,,ஒரு 10 வயது பையனை பற்றிய கதை இது. கதையை கேளுங்கள்....
Feb 28, 2024
16 min
நூற்றி தொண்ணூத்தி நான்காவது கதை:ஏழு சீன சகோதரர்கள்(The Seven Chinese Brothers)
இது ஒரு சீன நாட்டுக் கதை. 7 சீன சகோதரர்கள் ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் 7 பேரும் ஒரே மாதிரி உருவமுள்ளவர்கள். ஒவ்வொருவருக்கும் தனிதனியாக ஒரு அபூர்வ சக்தி Super Power உண்டு. அவர்களுக்கு சீன சக்ரவர்த்தியிடமிருந்து ஆபத்து வந்த போது, எல்லோரும் தங்கள் சூப்பர் பவரை உபயோகித்து , தங்களை காப்பாற்றி கொள்கிறார்கள்.. எப்படி? கதையை கேளுங்கள்....
Feb 22, 2024
14 min
நூற்றி தொண்ணூத்தி மூன்றாவது கதை(ராணியும் குடியானவனின் மனைவியும்(The Queen and the Farmer's Wife)
இது இந்தியாவின் கர்னாடக மாகாணத்தில் கன்னட மொழியில்சொல்லப்பட்ட நாடோடி கதை. ஒரு நாட்டின் ராணி சொல்கிறாள்" ஒரு வீட்டின் ஏழ்மை நிலைக்கு கடவுளை பழி சொல்வது சரியாகாது. வீட்டு தலைவி திறமையோடும் அன்போடும் செயல்பட்டால், லஷ்மி தேவி வீடு தேடி வருவாள்." என்று. அதை நிரூபிக்க ,ராஜாவிடம் ஒரு பந்தயம் வைக்கிறாள். என்ன பந்தயம்? அவள் ஜயித்தாளா? கதையை கேளுங்கள்...
Feb 15, 2024
14 min
நூற்றி தொண்ணூத்தி இரண்டாவது கதை:தந்திரகார மனிதன் பெட்ரோ (The Cunning Man-Pedro)
இது ஒரு மாலாவி நாட்டுக்கதை. இது ஒரு Trickster Tale. பெட்ரோ ஒரு தந்திரகாரன். பஞ்ச காலத்தில், தனக்கு வேண்டிய பொருள்களை, தன் புத்திசாலித்தனத்தை உபயோகித்து,மற்றவர்களை ஏமாற்றி அடைகிறான். எப்படி? கதையை கேளுங்கள்...
Feb 8, 2024
14 min
Load more