SBS Tamil - SBS தமிழ்
SBS Tamil - SBS தமிழ்
SBS
Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
சிட்னியில் தமிழர் நினைவுச் சின்னம் திறப்பு
சிட்னியில் தமிழர் நினைவுச் சின்னம் திறந்துவைக்கப்பட்டது குறித்த செய்தி. முன்வைப்பவர் றைசெல்.
May 17
3 min
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (10 – 16 மே 2026)
ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (10 மே – 16 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
May 16
7 min
செய்தியின் பின்னணி: Coalition கூட்டணி One Nation கட்சி கொள்கைகளைப் பின்பற்றுகிறதா?
Coalition கூட்டணித் தலைவர் Angus Taylor தனது முதல் நிதிநிலை அறிக்கை பதிலுரையை வழங்கியுள்ளார். அதில், குடியேற்றத்தின் அளவைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவதாகவும், குடியுரிமை பெறாதவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதைத் தடை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். குடிவந்தவர்களால்தான் நாட்டில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன என்று Coalition கூட்டணி குறை கூறுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், எதிர்க்கட்சி தங்கள் கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் குடியேற்றத்திற்கு எதிரான Pauline Hanson தலைமையில் இயங்கும் One Nation கட்சி குற்றம் சாட்டுகிறது. Sydney Lang எழுதிய விவரணத்தை அடிப்படையாகக் கொண்டு, இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
May 15
9 min
செய்தியின் பின்னணி: Skilled Migrantsக்குப் புதிய கதவுகளைத் திறக்கும் ஆஸ்திரேலியா - குடிவரவில் மாற்றங்கள்
ஆஸ்திரேலியாவில் திறன் அடிப்படையிலான குடியேற்றம் (Skilled Migration), வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து தற்போது முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசின் நிதிநிலை அறிக்கையில் (Federal Budget 2026) வெளியிடப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், வெளிநாட்டு திறமையாளர்கள் விரைவாக வேலைவாய்ப்பில் இணைய வழிவகுக்கும் என அரசு தெரிவிக்கிறது. இது பற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
May 15
9 min
இன்றைய செய்திகள்: 15 மே 2026 - வெள்ளிக்கிழமை
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 15/05/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
May 15
4 min
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழர் இனப்பிரச்சனை தொடர்பான கண்காட்சி
ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் அகதிகள் பேரவை (Tamil Refugee Council) ஏற்பாடு செய்த ‘Tamil Genocide Truth Telling Exhibition’ எனும் கண்காட்சி கடந்த புதன்கிழமை (13 மே) நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதாக கூறப்படும் வன்முறை, இடப்பெயர்வு, மனித உரிமை மீறல், அது தொடர்பான நீதி கோரிக்கைகள் என்று பல ஆவணங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்வின் நோக்கம், இப்படியான செயற்பாடுகள் குறித்து எழும் விமர்சனம் பற்றி தமிழ் அகதிகள் பேரவையின் NSW மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி இன்பகுமார் அவர்கள் கலந்துரையாடுகிறார். அவரோடு உரையாடியவர் – றைசெல்.
May 15
5 min
‘ஜோசப் விஜய் எனும் நான்’: ஆஸ்திரேலிய தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர்?
தமிழ்நாட்டில் “ஜோசப் விஜய் எனும் நான்” என்று கூறி முதலமைச்சராக பதவி ஏற்றார் பிரபல நடிகர் விஜய். அவர் குறித்தும், அவர் ஆட்சி குறித்த எதிர்பார்ப்பு குறித்தும் ஆஸ்திரேலிய தமிழ் மக்கள் சிலரின் கருத்துக்களை SBS தமிழ் நிகழ்ச்சிக்காக தொகுத்தளிக்கிறார் சுக்ருதி நாராயணன்.
May 14
12 min
நிதிநிலை அறிக்கை 2026: முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான புதிய சலுகை
2026 பெடரல் நிதிநிலை அறிக்கையில், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய மாற்றம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
May 14
2 min
Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? அதனை எவ்வாறு திட்டமிடுவது?
Palliative care விழிப்புணர்வு வாரம் இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? இந்த சேவையை யாரெல்லாம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்று Palliative care குறித்து பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் முதியோர் நல வைத்தியர் Dr பூரணி முருகானந்தம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
May 14
12 min
மர்மங்கள்- ஒரு தொடர்கதை: The Great Train Robbery
வாழ்க்கையின் நிகழ்வுகள், குற்றச்செயல்கள்- அது தொடர்பான வழக்குகள், காணாமல் போன நபர்கள் மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள், விநோதமான சம்பவங்கள், விளக்கமில்லாத -யார் செய்தார் - எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை அறியப்படாத மரணங்கள், யூகங்கள், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட புதிர்கள்- என்று, தீர்வு அல்லது விளக்கம் இல்லாமல் உலகில் இன்றும் பல மர்மங்கள் தொடர்கின்றன. அப்படியான unresolved mysteries - விடை காணப்படாத அல்லது தீர்வு காணமுடியாத மர்மங்களை - இந்த தொடரும் கதைகள் சிலவற்றை நேயர்களுக்கு கொண்டுவருவதே ‘மர்மங்கள் ஒரு தொடர்கதை’ என்ற இந்த தொடர். மர்மங்கள்- ஒரு தொடர்கதை - Unresolved mysteries – தொடரில் 1963 ஆம் ஆண்டு London Royal Mail Trainயில் நடந்த கொள்ளை சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
May 14
11 min
Load more