Show notes
பவுல் இந்த இடத்தில் மிக அழகான ஒரு ஒப்புமையை பயன்படுத்துகிறார். இங்கே நியாயப்பிரமாணத்தை கணவனாகவும் மனிதர்களை மனைவியாகவும் சித்தரிக்கிறார். மனிதர்கள் சட்ட விதிகளின்படி நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்களான நம்முடைய நிலை மாறிவிட்டது. நாம் ஏற்கனவே கற்றுக்கொண்டது போல விசுவாசிகளான நாம் கிறிஸ்துவுக்குள் மரித்து உயிர்த்தெழுந்திருக்கிறோம். அந்த உண்மையின் படி கிறிஸ்துவின் சரீரத்தைனாலே நாம் நியாயப்பிரமாணத்துக்கு மரித்து கிறிஸ்து எனும் வேறொருவருக்கனவர்களாக ஆகியிருக்கிறோம். வேதாகமத்தின் அடிப்படையில் மரணம் என்பது பிரிவு ஜீவன் என்பது உறவு / இணைப்பு என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அந்த அடிப்படையில் நாம் நாம் நியாயப்பிரமாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு கிறிஸ்துவுடன் உறவுள்ளவர்களாக இணைக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்.



