Show notes
கிருபைக்கு கீழ்பட்டிருக்கிற உங்களை பாவம் இனி மேற்கொள்ள முடியாது என்று பவுல் எழுதுகிறார். நாம் தொடர்ந்து பார்த்துவருகிறபடி இந்த இடத்தில் பாவம் என்பதைப்பற்றிய புரிதல் மிக மிக அவசியமானது. இந்த வசனத்தில் பாவம் என்று பவுல் எதை குறிப்பிடுகிறார்? நிலையையா? செயலையா? நம்முடைய பழைய பாவ நிலையை குறிப்பிடுகிறார். நாம் செய்யும் பாவ செயல்களை அல்ல.
இந்த வசனத்தில் பவுல் ஒருவேளை பாவ செயலை குறிப்பிடுவாரானால், இரட்சிக்கப்பட்டவர்களால் பாவம் செய்யவே முடியாது, பாவ செயல்களுக்கு இரட்சிக்கப்பட்டவர்களை மேற்கொள்ள வல்லமை கிடையாது என்கிற பொருள் வருகிறது. அது தவறான புரிதல் என்பது உடனடியாக நமக்கு புரியும்.



