Show notes
கட்டை விரலும் மற்ற விரல்களும்
ஒருமுறை, எல்லா விரல்களும் கட்டை விரலுக்குப் போட்டியாகச் சேர்ந்து கொண்டன. தங்களைவிட கட்டை விரல் உயரம் குறைவாகவும் பருமனாகவும் இருப்பாதாகக் கூறி கேலி செய்தன.
அதைக் கண்டு வருந்திய கட்டை விரல், இனி மற்ற விரல்களுடன் சேரக் கூடாதென எண்ணித் தனித்து அசையாமல் நின்றுகொண்டது.
கை எதையாவது எழுதவோ பிடிக்கவோ முயன்றபோது கட்டைவிரலின்றி இயலவில்லை.
மற்ற விரல்கள் இதைக் கண்டு கட்டை விரலின் அருமையை உணர்ந்தன. கட்டைவிரலிடம், “நீதான் பெருவிரல்” என்று கூறித் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கோரின. கட்டை விரலும் அவர்களை மன்னித்து அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய, கை மீண்டும் பலம் பெற்றது.
---
“365 Moral Stories” என்ற நூலிலிருந்து தேர்ந்த ஒரு கதையின் தமிழாக்கம்.



