Kathai Solli
Kathai Solli
Kathai Solli
யானையும் எறும்பும் - கதை சொல்லி - ஒரு நிமிடக் கதை
1 minutes Posted Dec 28, 2020 at 1:04 am.
0:00
1:00
Download MP3
Show notes
யானையும் எறும்பும்
ஒரு காட்டில், ஒரு யானையும் எறும்பும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. ஒருநாள் இருவரும் பேசிக்கொண்டே காலாற மலைஉச்சி வரை நடந்தன. அப்போது அந்த யானை எறும்பிடம் ஜம்பமாக  “நான் பலமாக மூச்சு விட்டால் கூட நீ பறந்து போவாய்” என்று ஏளனமாகக் கூறிச் சிரித்தது. அந்த யானைக்கு எப்போதுமே தான் வலியவன் பெரியவன் என்ற தலைக்கனம் இருந்தது.
திடீரென்று அப்போது பூமி குலுங்கி, காலடியில் நிலம் பிளந்தது. அதிர்ந்த யானை கீழே விழுந்து முன்னங்காலை முறிந்துக்கொண்டது. ஆனால் எறும்பு லேசாக மிதந்து கீழே இறங்கியது.
வலியில் பிளிறிகொண்டிருந்த யானையைப் பார்த்து எறும்பு, “நான் சிரியவனாக இருப்பதே எனக்கு மகிழச்சி” என்று கூறியது. வலியில் துடித்தத் தன் யானை நண்பனுக்குக்கு சிகிச்சையளிக்க மருத்துவரைத் தேடிப் போனது.
---
"365 Moral Stories" என்ற நூலிலிருந்து தேர்ந்த ஒரு கதையின் தமிழாக்கம்.