Show notes
ஐஸ்கிரீம் என்னாச்சு?
துளசி என்றொரு பெண் இருந்தாள். ஒருநாள், அவள் தன் நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கழைத்து ஐஸ்கிரீம் விருந்தளிக்க ஆசைப்பட்டாள். ஐஸ்கிரீம் செய்வதெப்படி என்று தன் தந்தையிடம் கேட்டறிந்து, தயாரித்து, அது உறைய ஃப்ரீசரில் வைத்தாள்.
சில நிமிடங்களிலேயே, பொறுமையிழந்தவளாய் ஃப்ரீசரைத் திறந்து ஐஸ்கிரீம் உறைந்துவிட்டதா என்று பார்த்தாள். அதெப்படி சடுதியில் உறையும்!
பத்து நிமிடங்களுக்கொருமுறை ஃப்ரீசரைத் திறந்து பார்த்தாள். அவள் ஒவ்வொருமுறை திறக்கும்போதும் குளிர்க்காற்று வெளியேறியது. நான்கு மணி நேரம் கழிந்தும் உறையவில்லை.
போதாக்குறைக்கு, துளசியின் நண்பர்கள் வரும் வேளையில், ஃப்ரிட்ஜ் பழுதானது. பொறுமையற்ற துளசியின் ஐஸ்கிரீம் விருந்தும் பாழானது.
---
‘365 Moral Stories’ என்ற நூலிலிருந்து தேர்ந்த கதையின் தமிழாக்கம்.



