Show notes
பேனாவும் பென்சிலும்
ஒரு நாள், ஒரு பேனாவும் பென்சிலும் அருகருகே ஒரு மேஜையில் அமர்ந்திருந்தன. முன்மாலை நேரம், இருவரும் வேலை எதுவுமின்றி ஓய்வாகப் பேச ஆரம்பித்தனர்.
பேனா பென்சிலிடம் கேட்டது, “ஒவ்வொருமுறை உன்னை யாரேனும் பயன்படுத்தும் போதும் நீ தேய்கிறாயே, உனக்கு வருத்தமாக இல்லையா?” என்று.
“முதலில் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. பின், என்னைக் கொண்டு அவர்கள் தீட்டும் அழகழகான ஓவியங்களைப் பார்க்கும்போது, நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தேன்” என்று பதிலளிதத்து பென்சில்.
உன் நிலையின் நீ மகிழ்ச்சியாய் இரு.
---
‘365 Moral Stories” என்ற நூலிலிருந்து தேர்ந்த கதையின் தமிழாக்கம்.



