Show notes
சாது மிரண்டால் காடு கொள்ளாதுஎன்னை விமர்சிப்பவர்களைப் பற்றிநான் கவலைப் கொள்வதில்லை - ஆனால்அனுதாபப்படுகிறேன்என்னை விமர்சிப்பர்கள் இன்று(இங்கு)மட்டுமில்லைஎன்னை விமர்சிப்பவர்கள்யாரும் வேற்று கிரக வாசிகளில்லைஎன்னுடன் ஒரு காலத்தில்நட்புக் கொண்டவர்கள் மட்டுமேநான் எழுந்தால் ஒருஎட்டு வந்து பார்க்காதவர்கள்நான் விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பவர்கள் அவர்கள்என்னைப் பற்றிசிந்திப்பதை விடுங்கள்!!!எனக்கு தாகம் அதிகம்மழை நீர் போதாது -என் பயணம் சமுத்திரத்தைநோக்கி தான்!!!என்னால் தண்ணீருக்குள்ளும்சுவாசிக்க முடியும்என் நம்பிக்கைக்கு பலகைகள் உண்டுவிதியை நம்பிமுகந்தொங்க மாட்டேன் - நான்மூலிகைத் தமிழன்என் கர்வமெல்லாம்கிராம்; கணக்கில் தான் - ஆனால்நம்பிக்கை கிலோ கணக்கில்!விலகி போன பிறகு விழுந்துகிடப்பதெல்லாம் முட்டாள்தனம்நான் முட்டாளில்லை!!!என் பின்னால் என்னைப் பற்றிபேசி என்னை பெரியவனாகமாற்றி விடாதீர்கள்!!!என்னால் தீயையும்மூட்ட முடியும்தீபமும் ஏற்றவும்முடியும்ஆனால் ஒன்றுமட்டும் இறுதியாக"சாது மிரண்டால்காடு கொள்ளாது"என்னை மிரளவைத்து மட்டும்பார்த்து விடாதீர்கள்இழப்பு உங்களுக்குஉங்களுக்கு மட்டுமே!!!



