Show notes
பாடல் : 81நீநானென் றிரண்டி லாமல் நிறைந்தபூ ரணமாய் எங்கும்,நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே என்றான்,தானாகும் பிரம ரூபம் சற்குரு நூலால் தோன்றும்,ஆனாலும் தடைகள் உண்டேல் அனுபவம் உறைத்தி டாதே.பாடல் :82தடையெவை யெனில் அஞ்ஞான சந்தேக விபரீ தங்கள்,படர்செயும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே,உடனுடன் வரும்வந் தக்கால் உயர்ஞானம் கெடும்இ வற்றைத்,திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே.பாடல் : 83அக்கினி கட்டுப் பட்டால் அற்பமும் சுடமாட் டாது,மக்கின ஞானத் தாலே வந்தபந் தமும்வே வாது,சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே,விக்கின மடம்சந் தேகம் விபரீதம் போக்கு வாயே.பாடல் : 84பிரமபா வனையை மூடிப் பேதம்காட் டுவதஞ் ஞானம்,குரவன்வாக் கியம்நம் பாமல் குழம்புவ தாம்சந் தேகம்,திரமறு சகம்மெய் என்றும் தேகம்நான் என்றும் உள்ளே,விரவிய மோகம் தானே விபரீதம் என்பர் மேலோர்.பாடல் : 85தத்துவ அநுபோ கம்தான் சாதித்தல் கேட்டல் என்பார், ஒத்துள பொருள்ஊ கத்தால் உசாவல்சிந் தித்தல் என்பார்,சித்தம் ஏகாந்தம் ஆன தெரிசனம் தெளிதல் என்பார்,நித்தமிப் படிச்செய் தக்கால் நிருவாணம் பெறுவாய் நீயே.

