Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம் -26
39 minutes Posted Feb 26, 2026 at 12:00 pm.
0:00
39:50
Download MP3
Show notes
பாடல் : 81
நீநானென் றிரண்டி லாமல் நிறைந்தபூ ரணமாய் எங்கும்,
நானாகத் தெளிந்த ஞானம் நழுவுமோ குருவே என்றான்,
தானாகும் பிரம ரூபம் சற்குரு நூலால் தோன்றும்,
ஆனாலும் தடைகள் உண்டேல் அனுபவம் உறைத்தி டாதே.
பாடல் :82
தடையெவை யெனில் அஞ்ஞான சந்தேக விபரீ தங்கள்,
படர்செயும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத் தாலே,
உடனுடன் வரும்வந் தக்கால் உயர்ஞானம் கெடும்இ வற்றைத்,
திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே.
பாடல் : 83
அக்கினி கட்டுப் பட்டால் அற்பமும் சுடமாட் டாது,
மக்கின ஞானத் தாலே வந்தபந் தமும்வே வாது,
சிக்கெனப் பழகிக் கேட்டல் சிந்தித்தல் தெளித லாலே,
விக்கின மடம்சந் தேகம் விபரீதம் போக்கு வாயே.
பாடல் : 84
பிரமபா வனையை மூடிப் பேதம்காட் டுவதஞ் ஞானம்,
குரவன்வாக் கியம்நம் பாமல் குழம்புவ தாம்சந் தேகம்,
திரமறு சகம்மெய் என்றும் தேகம்நான் என்றும் உள்ளே,
விரவிய மோகம் தானே விபரீதம் என்பர் மேலோர்.
பாடல் : 85
தத்துவ அநுபோ கம்தான் சாதித்தல் கேட்டல் என்பார்,
ஒத்துள பொருள்ஊ கத்தால் உசாவல்சிந் தித்தல் என்பார்,
சித்தம் ஏகாந்தம் ஆன தெரிசனம் தெளிதல் என்பார்,
நித்தமிப் படிச்செய் தக்கால் நிருவாணம் பெறுவாய் நீயே.