Show notes
பாடல் : 86எத்தனை நாள்ஞா தாவும் ஞானமும் இருக்கும் உன்பால்,அத்தனை நாளும் வேண்டும் அப்பால்ஓர் செயலும் வேண்டா,நித்தமும் வெளிபோல் பற்றா ஞேயம்மாத் திரமாய்ச் சீவன்,முத்தர்ஆ னவர்வி தேக முத்திபெற் றிருப்பார் என்றும்.பாடல் : 87ஞானமார் ஜீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்,வான்நிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன்,ஆனவர் நாமமும் ஆகும் அவர்களில் பிரம வித்தின்,தானமும் மற்றை மூவர் தாரதம் மியமும் சொல்வேன்.பாடல் : 88தீரராய்ப் பிரம வித்தாய்த் தெளிந்தவர் தெளியு முன்னம்,வாரமாய் இருந்த தங்கள் வருணமாச் சிரமம் சொன்ன,பாரகா ரியமா னாலும் பலர்க்குப கார மாக,நேரதாச் செய்வர் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர்.பாடல் : 89காமமா திகள்வந் தாலும் கணத்தில்போம் மனத்தில் பற்றார்,தாமரை இலைத்தண் ணீர்போல் சகத்தொடும் கூடி வாழ்வார்,பாமரர் எனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார்,ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர்.பாடல் : 90 புறவாழ்க்கைபேதகர் மத்தால் வந்த பிரா ரத்தம் நாநா வாகும்,ஆதலால் விவகா ரங்கள் அவரவர்க் காவ வாகும்,மாதவம் செயினும் செய்வார் வாணிபம் செயினும் செய்வார்,பூதலம் புரப்பார் ஐயம் புகுந்துண்பார் சீவன் முத்தர்.


