Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம்-27
39 minutes Posted Mar 5, 2026 at 12:00 pm.
0:00
39:14
Download MP3
Show notes
பாடல் : 86
எத்தனை நாள்ஞா தாவும் ஞானமும் இருக்கும் உன்பால்,
அத்தனை நாளும் வேண்டும் அப்பால்ஓர் செயலும் வேண்டா,
நித்தமும் வெளிபோல் பற்றா ஞேயம்மாத் திரமாய்ச் சீவன்,
முத்தர்ஆ னவர்வி தேக முத்திபெற் றிருப்பார் என்றும்.
பாடல் : 87
ஞானமார் ஜீவன் முத்தர் நால்வகை யாவர் கேளாய்,
வான்நிகர் பிரம வித்து வரன்வரி யான்வ ரிட்டன்,
ஆனவர் நாமமும் ஆகும் அவர்களில் பிரம வித்தின்,
தானமும் மற்றை மூவர் தாரதம் மியமும் சொல்வேன்.
பாடல் : 88
தீரராய்ப் பிரம வித்தாய்த் தெளிந்தவர் தெளியு முன்னம்,
வாரமாய் இருந்த தங்கள் வருணமாச் சிரமம் சொன்ன,
பாரகா ரியமா னாலும் பலர்க்குப கார மாக,
நேரதாச் செய்வர் தீர்ந்த நிலைவிடார் சீவன் முத்தர்.
பாடல் : 89
காமமா திகள்வந் தாலும் கணத்தில்போம் மனத்தில் பற்றார்,
தாமரை இலைத்தண் ணீர்போல் சகத்தொடும் கூடி வாழ்வார்,
பாமரர் எனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார்,
ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர்.
பாடல் : 90 புறவாழ்க்கை
பேதகர் மத்தால் வந்த பிரா ரத்தம் நாநா வாகும்,
ஆதலால் விவகா ரங்கள் அவரவர்க் காவ வாகும்,
மாதவம் செயினும் செய்வார் வாணிபம் செயினும் செய்வார்,
பூதலம் புரப்பார் ஐயம் புகுந்துண்பார் சீவன் முத்தர்.