Show notes
பாடல் : 76தஞ்சமாம் குருவும் சொன்ன தத்துவ வழிதப் பாமல்,பஞ்சகோ சமும்க டந்து பாழையும் தள்ளி உள்ளில்,கொஞ்சமாம் இருப்பும் விட்டுக் கூடத்தன் பிரமம் என்னும்,நெஞ்சமும் நழுவி ஒன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான்.பாடல் : 77அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே அகண்டம் ஆகித்,தனுகர ணங்கள் ஆதி சகலமும் இறந்து சித்தாய்,மனதுபூ ரணமாய்த் தேகம் ஆனசற் குருவும் காண,நனவினில் சுழுத்தி ஆகி நன்மகன் சுபாவம் ஆனான்.பாடல் : 78அளிமகன் நெடும்போது இவ்வாறு ஆனபின் மனது மெள்ள,வெளியில்வந் திடஉ ணர்ந்தான் விமலதே சிகனைக் கண்டான்,துளிவிழி சொரியப் பாதம் தொழுதுவீழ்ந் தெழுந்து சூழ்ந்தான்,குளிர்முகச் சுவாமி கேட்கக் கும்பிட்டு நின்று சொல்வான்.பாடல் : 79ஐயனே எனதுள் ளேநின் றநந்தசன் மங்கள் ஆண்ட,மெய்யனே உபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி,உய்யவே முத்தி நல்கும் உதவிக்கோர் உதவி நாயேன்,செய்யுமா றொன்றும் காணேன் திருவடி போற்றி போற்றி.பாடல் : 80சிட்டனிவ் வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக்,கிட்டவா எனஇ ருத்திக் கிருபையோ டருளிச் செய்வார்,துட்டமாம் தடைகள் மூன்றும் தொடராமல் சொரூப ஞான,நிட்டனாய் இருக்கின் ஈதே நீசெயும் உதவி ஆமே.

