Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம் -25
26 minutes Posted Feb 19, 2026 at 12:00 pm.
0:00
26:57
Download MP3
Show notes
பாடல் : 76
தஞ்சமாம் குருவும் சொன்ன தத்துவ வழிதப் பாமல்,
பஞ்சகோ சமும்க டந்து பாழையும் தள்ளி உள்ளில்,
கொஞ்சமாம் இருப்பும் விட்டுக் கூடத்தன் பிரமம் என்னும்,
நெஞ்சமும் நழுவி ஒன்றாய் நின்றபூ ரணத்தைக் கண்டான்.
பாடல் : 77
அனுபவா நந்த வெள்ளத் தழுந்தியே அகண்டம் ஆகித்,
தனுகர ணங்கள் ஆதி சகலமும் இறந்து சித்தாய்,
மனதுபூ ரணமாய்த் தேகம் ஆனசற் குருவும் காண,
நனவினில் சுழுத்தி ஆகி நன்மகன் சுபாவம் ஆனான்.
பாடல் : 78
அளிமகன் நெடும்போது இவ்வாறு ஆனபின் மனது மெள்ள,
வெளியில்வந் திடஉ ணர்ந்தான் விமலதே சிகனைக் கண்டான்,
துளிவிழி சொரியப் பாதம் தொழுதுவீழ்ந் தெழுந்து சூழ்ந்தான்,
குளிர்முகச் சுவாமி கேட்கக் கும்பிட்டு நின்று சொல்வான்.
பாடல் : 79
ஐயனே எனதுள் ளேநின் றநந்தசன் மங்கள் ஆண்ட,
மெய்யனே உபதே சிக்க வெளிவந்த குருவே போற்றி,
உய்யவே முத்தி நல்கும் உதவிக்கோர் உதவி நாயேன்,
செய்யுமா றொன்றும் காணேன் திருவடி போற்றி போற்றி.
பாடல் : 80
சிட்டனிவ் வாறு கூறத் தேசிகர் மகிழ்ந்து நோக்கிக்,
கிட்டவா எனஇ ருத்திக் கிருபையோ டருளிச் செய்வார்,
துட்டமாம் தடைகள் மூன்றும் தொடராமல் சொரூப ஞான,
நிட்டனாய் இருக்கின் ஈதே நீசெயும் உதவி ஆமே.