Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம்-24
30 minutes Posted Feb 12, 2026 at 12:00 pm.
0:00
30:21
Download MP3
Show notes
பாடல் : 71
வடநூல்வல் லவர்கள் சொல்லும் வாக்கியப் பொருள்சே ராமல்,
இடராகின் பொருளாம் வண்ணம் இலக்கணை உரையால் கொள்வார்,
திடமான அதுவும் மூன்றாச் செப்புவார் விட்ட தென்றும்,
விடல் இலா தென்றும் விட்டு விடாததென் றும்பே ராமே.
பாடல் : 72
கங்கையில் கோஷம் என்றும் கறுப்புச்சேப் போடு தென்றும்,
தங்கிய சோயம் தேவ தத்தனென் றும்சொல் வார்கள்,
இங்குதா ரணங்கள் ஆக்கி இந்தமூன்று உரைக ளாலே,
துங்கநூல் விரோதம் ஆன சொல்எலாம் பொருளாம் தானே.
பாடல் : 73
பன்னிய சோயம் என்னும் பதங்களின் வாச்சி யார்த்தம்,
அன்னிய தேசம் காலம் அவனிவன் என்ப எல்லாம்,
சொன்ன இவ் விரோதம் விட்டுத் தொடரிலக் கியம்வி டாமல்,
உன்னிடில் தேவ தத்தன் ஒருவனை வெளியாக் காட்டும்.
பாடல் : 74
தத்துவ மெனும்ப தங்கள் பிரமமாய்ச் சாட்சி யான,
வத்துவை விடாமல் பேத வாச்சியார்த் தத்தை விட்டு,
நித்தமும் அதுநீ யாகும் நீயது வாகும் என்னும்,
அர்த்தமு மகண்ட மென்றே அசிபத ஐக்கியம் காட்டும்.
பாடல் : 75
கடநீரில் மேக நீரில் கண்டவான் இரண்டும் பொய்யே,
குடவானும் பெரிய வானும் கூடியொன் றாமெப் போதும்,
இடமான பிரமம் சாட்சி இரண்டுமெப் போதும் ஏகம்,
திடமாகச் சுவாநு பூதி சிவோகமென் றிருந்தி டாயே.