Show notes
பாடல் : 71வடநூல்வல் லவர்கள் சொல்லும் வாக்கியப் பொருள்சே ராமல்,இடராகின் பொருளாம் வண்ணம் இலக்கணை உரையால் கொள்வார்,திடமான அதுவும் மூன்றாச் செப்புவார் விட்ட தென்றும்,விடல் இலா தென்றும் விட்டு விடாததென் றும்பே ராமே.பாடல் : 72கங்கையில் கோஷம் என்றும் கறுப்புச்சேப் போடு தென்றும்,தங்கிய சோயம் தேவ தத்தனென் றும்சொல் வார்கள்,இங்குதா ரணங்கள் ஆக்கி இந்தமூன்று உரைக ளாலே,துங்கநூல் விரோதம் ஆன சொல்எலாம் பொருளாம் தானே.பாடல் : 73பன்னிய சோயம் என்னும் பதங்களின் வாச்சி யார்த்தம்,அன்னிய தேசம் காலம் அவனிவன் என்ப எல்லாம்,சொன்ன இவ் விரோதம் விட்டுத் தொடரிலக் கியம்வி டாமல்,உன்னிடில் தேவ தத்தன் ஒருவனை வெளியாக் காட்டும்.பாடல் : 74தத்துவ மெனும்ப தங்கள் பிரமமாய்ச் சாட்சி யான,வத்துவை விடாமல் பேத வாச்சியார்த் தத்தை விட்டு,நித்தமும் அதுநீ யாகும் நீயது வாகும் என்னும்,அர்த்தமு மகண்ட மென்றே அசிபத ஐக்கியம் காட்டும்.பாடல் : 75கடநீரில் மேக நீரில் கண்டவான் இரண்டும் பொய்யே,குடவானும் பெரிய வானும் கூடியொன் றாமெப் போதும்,இடமான பிரமம் சாட்சி இரண்டுமெப் போதும் ஏகம்,திடமாகச் சுவாநு பூதி சிவோகமென் றிருந்தி டாயே.

