Show notes
பாடல் : 66எல்லாம்கண் டறியும் என்னை ஏதுகொண் டறிவேன் என்று,சொல்லாதே சுயமாம் சோதிச் சுடருக்குச் சுடர்வே றுண்டோ,பல்லார்முன் தசமன் தன்னைப் பார்த்தலும் தனைக்கொண் டேதான்,அல்லாமல் பதினொன் றானும் அவனிடத் துண்டோ பாராய்.பாடல் : 67அறிவுக்கும் அறிவு செய்யும் அறிவுவேறு உண்டென் றெண்ணும்,அறிவற்ற குதர்க்க மூடர்க் கனவத்தை பலமாய்த் தீரும்,அறிபடும் பொருள்நீ அல்லை அறிபடாப் பொருள்நீ அல்லை,அறிபொருள் ஆகும் உன்னை அனுபவித்து அறிவாய் நீயே.பாடல் : 68மதுரமாம் கட்டி சுட்ட மாப்பணி யாரம் எல்லாம்,மதுரமாக் கியஅ தற்கு மதுரம்தான் சுபாவம் அன்றோ,அதுவிது எனும்ச டங்கள் அறிவாக அறிவைத் தந்தே,அதுவிது இரண்டும் ஆகா அகம்பொருள் அறிவாய் நீயே.பாடல் : 69இந்தநீ துவம்ப தத்தின் இலட்சியப் பொருளாம் என்றும்,பந்தமில் பிரம மேதற் பதந்தனின் இலட்சி யார்த்தம்,அந்தமாம் சீவன் ஈசன் அவர்களே வாச்சி யார்த்தம்,சந்ததம் பேதம் ஆவார் தமக்கயிக் கியங்கூ டாதே.பாடல் : 70பேதம்ஆ னதுவும் கேளாய் பெயராலும் இடங்க ளாலும்,ஓதரும் உபாதி யாலும் உடலாலும் உணர்வி னாலும்,பாதலம் விசுவம் போலப் பலதூரம் அகன்று நிற்பர்,ஆதலால் இவர்க்கெந் நாளும் அயிக்யமென் பதுகூ டாதே.

