Show notes
பாடல் : 61கரணமாம் மனது புத்தி கர்த்தாவாம் அவை ஆன் மாவோ, தரமுள இரண்டு கோசம் சத்துவ குணவி காரம்,வரம்அறு துயில் ஆநந்த மயனையும் நான்என் னாதே,விரவிய தமஅஞ் ஞான விருத்தியின் விகாரம் ஆமே.பாடல் : 62சத்தொடு சித்ஆ நந்தம் சமம்திரம் சாட்சி ஏகம்,நித்தியம் வியாபி ஆன்மா நீயதுவா யறிந்து,பொத்தொடு சமம்துக் காதி பொருந்துபே தங்கள் ஆன,குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியில் ஆவாய்.பாடல் : 63பஞ்சகோ சமும்விட் டப்பால் பார்க்கின்ற பொழுது பாழே,விஞ்சிய ததுவல் லாமல் வேறொன்றும் தெரியக் காணேன்,அஞ்சன இருளை யோநான் அகம்என அநுப விப்பேன்,வஞ்சம் இல் குருவே என்ற மகன்மதி தெளியச் சொல்வார். பாடல் : 64முன்புகல் தசமன் புத்தி மோகத்தால் எண்ணி எண்ணி,ஒன்பது பேரைக் கண்ட ஒருவன் ஆம் தனைக்கா ணாத,பின்பவன் இடையில் கண்ட பெரியபாழ் அவனோ பாராய்,அன்புள மகனே காண்ப தடங்கலும் காண்பான் நீயே.பாடல் : 65தூலசூக் குமஅஞ் ஞானம் தோன்றும்மூன் றவத்தை தாமும்,காலமோர் மூன்றும் சன்மக் கடல்எழும் கல்லோ லங்கள்,போலவே வந்து வந்து போனஎத் தனைஎன் பேன்நான்,ஆலமர் கடவுள் ஆணை அவைக்கெலாம் சாட்சி நீயே.


