Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம் -22
28 minutes Posted Feb 3, 2026 at 12:16 am.
0:00
28:54
Download MP3
Show notes
பாடல் : 61
கரணமாம் மனது புத்தி கர்த்தாவாம் அவை ஆன் மாவோ,
தரமுள இரண்டு கோசம் சத்துவ குணவி காரம்,
வரம்அறு துயில் ஆநந்த மயனையும் நான்என் னாதே,
விரவிய தமஅஞ் ஞான விருத்தியின் விகாரம் ஆமே.
பாடல் : 62
சத்தொடு சித்ஆ நந்தம் சமம்திரம் சாட்சி ஏகம்,
நித்தியம் வியாபி ஆன்மா நீயதுவா யறிந்து,
பொத்தொடு சமம்துக் காதி பொருந்துபே தங்கள் ஆன,
குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியில் ஆவாய்.
பாடல் : 63
பஞ்சகோ சமும்விட் டப்பால் பார்க்கின்ற பொழுது பாழே,
விஞ்சிய ததுவல் லாமல் வேறொன்றும் தெரியக் காணேன்,
அஞ்சன இருளை யோநான் அகம்என அநுப விப்பேன்,
வஞ்சம் இல் குருவே என்ற மகன்மதி தெளியச் சொல்வார்.
பாடல் : 64
முன்புகல் தசமன் புத்தி மோகத்தால் எண்ணி எண்ணி,
ஒன்பது பேரைக் கண்ட ஒருவன் ஆம் தனைக்கா ணாத,
பின்பவன் இடையில் கண்ட பெரியபாழ் அவனோ பாராய்,
அன்புள மகனே காண்ப தடங்கலும் காண்பான் நீயே.
பாடல் : 65
தூலசூக் குமஅஞ் ஞானம் தோன்றும்மூன் றவத்தை தாமும்,
காலமோர் மூன்றும் சன்மக் கடல்எழும் கல்லோ லங்கள்,
போலவே வந்து வந்து போனஎத் தனைஎன் பேன்நான்,
ஆலமர் கடவுள் ஆணை அவைக்கெலாம் சாட்சி நீயே.