Show notes
பாடல்:31இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்தும் ஐந்தும்,பிராணவா யுக்கள் என்றும் பெருந்தொழிற் கருவி என்றும்,பராவிய பெயராம் இந்தப் பதினேழும் இலிங்க தேகம்,சுராசுரர் நரர்வி லங்காய்த் தோன்றிய உயிர்கட் கெல்லாம்.பாடல் : 32இவ்வுடல் மருவும் சீவன் இலங்குதை சதன்என் றாவன்,இவ்வுடல் மருவும் ஈசன் இரணிய கர்ப்பன் ஆவன்,இவ்வுடல் இரண்டு பேர்க்கும் இலிங்கசூக் குமச ரீரம்,இவ்வுடற் கோசம் மூன்றாம் இதுகனா அவத்தை ஆமே.பாடல் : 33சூக்கும சடம்இம் மட்டும் சொல்லினோம் இப்பால் தூலம்,ஆக்குமா ரோபம் தானும் அடைவினின் மொழியக் கேளாய்,தாக்கும் இவ் வுயிர்க்குத் தூல தனுவும்போ கமுமுண் டாகக்,காக்கும் அவ்வீசன் பஞ்சீ கரணங்கள் செய்தான் தானே.பாடல் : 34ஐந்துபூ தமும்பத் தாக்கி அவைபாதி நந்நான் காக்கி,நந்துதம் பாதி விட்டு நான்கொடு நான்கும் கூட்ட,வந்தன தூல பூதம் மகாபூதம் இவற்றி னின்றும்,தந்தன நான்காம் தூல தனுவண்ட புவன போகம்.பாடல் : 35தூலமே மருவும் சீவன் சொல்லிய விசுவ னாகும்,தூலமே மருவும் ஈசன் சொலும்விராட் புருட னாகும்,தூலமே அன்ன கோசம் துன்னும்சாக் கிரவ வத்தை,தூலகற் பனையீ தென்று தொகுத்தது மனத்திற் கொள்வாய்.

