Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம்-15
37 minutes Posted Nov 20, 2025 at 5:44 pm.
0:00
37:19
Download MP3
Show notes
பாடல்:31
இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்தும் ஐந்தும்,
பிராணவா யுக்கள் என்றும் பெருந்தொழிற் கருவி என்றும்,
பராவிய பெயராம் இந்தப் பதினேழும் இலிங்க தேகம்,
சுராசுரர் நரர்வி லங்காய்த் தோன்றிய உயிர்கட் கெல்லாம்.
பாடல் : 32
இவ்வுடல் மருவும் சீவன் இலங்குதை சதன்என் றாவன்,
இவ்வுடல் மருவும் ஈசன் இரணிய கர்ப்பன் ஆவன்,
இவ்வுடல் இரண்டு பேர்க்கும் இலிங்கசூக் குமச ரீரம்,
இவ்வுடற் கோசம் மூன்றாம் இதுகனா அவத்தை ஆமே.
பாடல் : 33
சூக்கும சடம்இம் மட்டும் சொல்லினோம் இப்பால் தூலம்,
ஆக்குமா ரோபம் தானும் அடைவினின் மொழியக் கேளாய்,
தாக்கும் இவ் வுயிர்க்குத் தூல தனுவும்போ கமுமுண் டாகக்,
காக்கும் அவ்வீசன் பஞ்சீ கரணங்கள் செய்தான் தானே.
பாடல் : 34
ஐந்துபூ தமும்பத் தாக்கி அவைபாதி நந்நான் காக்கி,
நந்துதம் பாதி விட்டு நான்கொடு நான்கும் கூட்ட,
வந்தன தூல பூதம் மகாபூதம் இவற்றி னின்றும்,
தந்தன நான்காம் தூல தனுவண்ட புவன போகம்.
பாடல் : 35
தூலமே மருவும் சீவன் சொல்லிய விசுவ னாகும்,
தூலமே மருவும் ஈசன் சொலும்விராட் புருட னாகும்,
தூலமே அன்ன கோசம் துன்னும்சாக் கிரவ வத்தை,
தூலகற் பனையீ தென்று தொகுத்தது மனத்திற் கொள்வாய்.