Show notes
பாடல் :27அழுக்கொடு பற்றும் சீவர்க்கு அதுவே ஆநந்த கோசம்,சுழுத்தி காரணசரீரம் சொன்னதிம் மட்டும் மோகம்,முழுக்குணத் திரண்டால் வந்த மூலவா ரோபம் சொன்னோம்,வழுத்துசூக் குமவா ரோப வழியும்நீ மொழியக் கேளாய்.பாடல் : 28ஏமமா யாவி னோத ஈசனார் அருளி னாலே,பூமலி உயிர்கட் கெல்லாம் போகசா தனம்உண் டாகத்,தாமத குணம்இ ரண்டு சக்தியாய்ப் பிரிந்து தோன்றும்,வீமம் ஆம் மூடல் என்றும் விவிதமாம் தோற்றம் என்றும்.பாடல் :29தோற்றம் ஆம் சத்தி தன்னின் சொல்லிய விண்ணாம் விண்ணின்,காற்றதாம் காற்றின் தீயாம் கனலில் நீர்நீரின் மண்ணாம்,போற்றும் இவ்வைந்தும் நொய்ய பூதங்கள் என்று பேராம்,சாற்றுமற் றிவற்றின் போக சாதன தனுஉண் டாகும்.பாடல்:30ஆதிமுக் குணமிப் பூதம் அடங்கலும் தொடர்ந்து நிற்கும்,கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும்,ஓதிய பின்னை ஐந்தும் உளம்புத்தி இரண்டா ஞான,சாதனமாம் இவ் வேழும் சற்குணப் பிரிவி னாலே.

