Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம் 16
39 minutes Posted Dec 5, 2025 at 8:09 pm.
0:00
39:17
Download MP3
Show notes
பாடல் : 36
சீரிய ஈச னார்க்கும் சீவர்க்கும் உபாதி ஒன்றேல்,
ஆரிய குருவே பேதம் அறிவதெப்படி என்றக்கால்,
காரிய உபாதி சீவன் காரண உபாதி ஈசன்,
வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே.
பாடல்: 37
மரங்கள் போல் வியட்டி பேதம் வனமெனல் சமட்டி பேதம்,
சரங்கள்தா வரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார்,
பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார்,
இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே.
பாடல் : 38
கற்பனை வந்த வாறு காட்டினோம் காண்ப எல்லாம்,
சொற்பனம் போலும் என்றே துணிந்தவன் ஞானி ஆவான்,
செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்த ஆ காசம் போல,
அற்புத முத்தி சேரும் அபவாத வழியும் கேளாய்.
பாடல் : 39
அரவன்று கயிறென் றாற்போல் ஆளன்று தறிஎன் றாற்போல்,
குரவன்சொல் உபதே சத்தால் கூறுநூல் ஒளியைக் கொண்டு,
புரமன்று புவன மன்று பூதங்க ளன்று ஞானத்,
திரமென்னும் பிரம மென்று தெளிவதே அபவா தம்காண்.
பாடல் : 40
படமும்நூ லும்போல் செய்த பணியும் பொன் னும்போல் பார்க்கின்,
கடமும்மண் ணும்போல் ஒன்றாம் காரிய கார ணங்கள்,
உடல்முதல் சுபாவம் ஈறா ஒன்றில்ஒன் றுதித்த ஆறே,
அடைவினில் ஒடுக்கிக் காண்ப தபவாத உபாயம் ஆமே.