Show notes
பாடல் : 36சீரிய ஈச னார்க்கும் சீவர்க்கும் உபாதி ஒன்றேல்,ஆரிய குருவே பேதம் அறிவதெப்படி என்றக்கால்,காரிய உபாதி சீவன் காரண உபாதி ஈசன்,வீரிய மிகுச மட்டி வியட்டியால் பேத மாமே.பாடல்: 37மரங்கள் போல் வியட்டி பேதம் வனமெனல் சமட்டி பேதம்,சரங்கள்தா வரங்கள் பேதத் தனியுடல் வியட்டி என்பார்,பரம்பிய எல்லாம் கூட்டிப் பார்ப்பதே சமட்டி என்பார்,இரங்கிய பலசீ வர்க்கும் ஈசர்க்கும் பேதம் ஈதே.பாடல் : 38கற்பனை வந்த வாறு காட்டினோம் காண்ப எல்லாம்,சொற்பனம் போலும் என்றே துணிந்தவன் ஞானி ஆவான்,செற்புதை மழைக்காலம் போய்த் தெளிந்த ஆ காசம் போல,அற்புத முத்தி சேரும் அபவாத வழியும் கேளாய்.பாடல் : 39அரவன்று கயிறென் றாற்போல் ஆளன்று தறிஎன் றாற்போல்,குரவன்சொல் உபதே சத்தால் கூறுநூல் ஒளியைக் கொண்டு,புரமன்று புவன மன்று பூதங்க ளன்று ஞானத்,திரமென்னும் பிரம மென்று தெளிவதே அபவா தம்காண்.பாடல் : 40படமும்நூ லும்போல் செய்த பணியும் பொன் னும்போல் பார்க்கின்,கடமும்மண் ணும்போல் ஒன்றாம் காரிய கார ணங்கள்,உடல்முதல் சுபாவம் ஈறா ஒன்றில்ஒன் றுதித்த ஆறே,அடைவினில் ஒடுக்கிக் காண்ப தபவாத உபாயம் ஆமே.

