Show notes
நியாயப்பிரமாணத்தின் தன்மையை குறித்து பவுல் முந்தைய அதிகாரங்களிலேயே எழுதியிருக்கிறார். நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? பாவத்தை வறையரை செய்வது. பாவத்தை சுட்டிக்காட்டுவது. மோசே மூலமாகத்தான் நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்படியானால் மோசேயின் காலகட்டத்திற்கு முன்னால் வாழ்ந்த மக்களிடத்தில் பாவம் இல்லையா? அவர்களிடத்திலும் பாவம் இருந்தது. ஆனால் எது பாவம் என வறையரை செய்யும் நியாயப்பிரமாணம் அவர்களிடத்தில் இல்லை. பாவத்தை குறித்த தெளிவான புரிதல் இல்லை. எனவே அவர்கள் பாவம் எண்ணப்படவில்லை.
கடவுளின் பார்வையில் பாவம் என்பது எப்போதுமே பாவம்தான். ஆனால் எது பாவம் என்பதை அவர் வறையரை செய்து நமக்கு கொடுக்காதவரை நமக்கு பாவத்தை பற்றி தெரியாது.



