நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்ட-பின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
நாம் முன்பு தேவனுக்கு சத்துருக்களாக இருந்தோம். அதுதான் பாவ நிலையில் நமக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவு. இப்போது கிறிஸ்துவின் மரணத்தால் கடவுளுடன் ஒப்புறவாக்கப்பட்டிருக்கிறோம். இது நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற நமது புதிய நிலையின் அடிப்படையிலான உறவு. முன்பு கடவுளுக்கு எதிரிகளாக இருந்தோம். இப்போது கடவுளுக்கு நண்பர்களாக இருக்கிறோம். முன்பு நமக்கு கடவுளுக்கும் ஒட்டுறவில்லை. இப்போது கட்வுளுடன் ஐக்கியத்தில் இருக்கிறோம்.
முன்பு நம் பான நிலையில் கடவுளுக்கு எதிரிகளாக இருக்கும்போதே அவருடைய குமாரனின் “மரணத்தின்” மூலமாய் அவருடன் ஒப்புறவாக்கப்பட்டோமானால், இப்போது ஒப்புறவான பின், சமாதானம் உண்டாயிருக்கும் நிலையில், உயிர்த்தெழுந்துவிட்ட கிறிஸ்துவின் “ஜீவனாலே” நாம் இரட்சிக்கப்படுவது எவ்வளவு நிச்சயம்!
இந்த பகுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாக சொல்வது இதைத்தான். வெறுக்கப்படும் நிலையில் இருந்தபோதே இரட்சித்தாரே, நேசிக்கப்படும் நிலையில் அவர் நம்மை இரட்சிப்பது எவ்வளவு நிச்சயம்.



