Tamil Spiritual Talks
Tamil Spiritual Talks
Bremma Sri Kundalini Siddhar
We post ancient siddhargal songs and their correct explanation to help people evolve themselves and understand what real spirituality is all about
ராமதேவர் song ep 141
சாபம் கொடுத்திட லாமோ ? - விதி தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ? கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ?  சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்  சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் நல்லபத்திவிசு வாசம் - எந்த நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். ராமதேவர் பாடல்
Sep 10, 2021
5 min
சிவவாக்கியர் song 140
அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! சிவவாக்கியர்
Sep 10, 2021
1 min
அழுகண்ணர் song ep 139
மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே முக்காலைக் காணாமல் என் கண்ணம்மா முழுதும் தவிக்கிறண்டி! அழுகண்ணர் பாடல்
Sep 10, 2021
2 min
அழுகண்ணர் song ep 138
ஆகாப் புலையனடி அஞ்ஞானந் தான்பேசிச் சாகாத் தலையறியேன் தன்னறிவு தானறியேன் வேகாத காலறியேன் விதிமோச மானேனடி நோகாமல் நொந்தல்லோ என் கண்ணம்மா! நொடியில்மெழு கானேனடி அழுகண்ணர் சித்தர்
Sep 10, 2021
4 min
அகப்பேய் song ep 137
மோட்சம் வேண்டார்கள்                      அகப்பேய்      முத்தியும் வேண்டார்கள் தீட்சை வேண்டார்கள்                        அகப்பேய்      சின்மய மானவர்கள். பொய்யென்று சொல்லாதே                    அகப்பேய்      போக்கு வரத்துதானே மெய்யென்று சொன்னவர்கள்                  அகப்பேய்      வீடு பெறலாமே. அகப்பேய் சித்தர்
Sep 10, 2021
2 min
அழுகண்ணி siddhar song ep 136
வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்று சொல்லித் தாழைப் பழந்தின்று சாவெனக்கு வந்ததடி தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ      வாழைப் பழந்தின்றால்               என் கண்ணம்மா      வாழ்வெனக்கு வாராதோ அழுகண்ணி சித்தர்
Sep 10, 2021
4 min
ஔவையார் song ep 135
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே ஔவையார் பாடல்
Sep 10, 2021
4 min
வால்மீகர் song ep 134
அறிந்து கொள்ளு பூரகமே சரியை மார்க்கம்      அடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்; பிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்;      பிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்; மறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு      மகத்தான சிவசத்தி அடங்கும் வீடு; சிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்      சிவசிவா அவனவனென் றுரைக்க லாமே. வால்மீகர் பாடல்
Sep 10, 2021
5 min
அகத்தியர் song ep 133
ஊணியதோர் ஓங்காரம் மேலுமுண்டே உத்தமனே சீருண்டே யூணிப்பாரே ஆணியாம் நடுநாடி நடுவே மூட்டும் ஆச்சரிய வெழுத்தெல்லாம் அடங்கிநிற்கும் ஏணியா யிருக்குமடா அஞ்சுவீடே ஏகாந்த மாகியவவ் வெழுத்தைப்பாரு தோணிபோற் காணுமடா அந்தவீடு சொல்லாதே ஒருவருக்குந்துரந்திட்டேனே. அகத்தியர் பாடல்
Sep 3, 2021
2 min
சிவவாக்கியர் song 131
அறிவிலே ப பிறந்திருந்து ஆகமங்கள் ஓதுறீர்,                     நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று  அறிகிலீர்,                     உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணைதேடும்                     அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?  சிவவாக்கியர் பாடல்
Sep 3, 2021
3 min
Load more