Tamil Poems | Blank Thoughts
Tamil Poems | Blank Thoughts
Sumathy Gnanasegar
VIsit : http://www.sumathygsmy.in/ Blank Thoughts Few thoughts from a selfless mind A Motivational Podcast by Sumathy Gnanasegar Tamil Poems by Sumathy Gnanasegar blank thoughts for school students. Here are the best Tamil poems of all the time. This Podcast consist of the Collection of my good thoughts which will be useful from seven to seventy years age group. Hidden for the past forty years. Published now to renovate all minds. என் பத்து வயதில் விதைத்து விளைந்த, புதைத்து வைத்த எழுத்துத் தொகுப்புகளை இப்பொழுது உங்களுக்குத் தருகிறேன்.
61. முகவரியில்லா முகம் | EMPTY FACE
இருள்மயமான எதிர்காலம் அவனுள்ளத்தில் எழுந்து வருகின்றன. இருமலைகளினிடையே தொங்கும் பாலம் அவன்பார்வையில் படுகின்றது. இருமுனைகளும் கட்டப்படாத ஊஞ்சலில் அவன்ஆடுவது அறிவில்தெரிகின்றது. இருப்புப்பாதை நீண்டுசென்றுஅவன்துயர்தனை நினைவுப் படுத்துகின்றது. இருகரங்களைத் தட்டியபோதும் ஓசை எழும்பாததை செவியறிகின்றது. இருண்டநிலவு குடிகொண்டுள்ள இடம் அவன்கண்களில் தெரிகின்றது. இருமுட்கள் இல்லாத கடிகாரம்அவன் காலத்தைக் கணிக்கின்றது. இருதயம்இல்லா மனிதர்கள் அவனிடம் ஒதுங்கிச்செல்வது புரிகின்றது. இருக்கையின்றி அவன்அமர முயலும் முட்டாள்தனம் தெரிகின்றது. இருகைகளையும் கட்டிக் கொண்டுஅவன் பூத்தொடுப்பது புரிகின்றது. இருண்டமனம்வேண்டாதுஇருமனம்வேண்டுவதை அவன்மனம் அறிகின்றது. வந்ததுயரை தாங்கஒன்று நொந்தவாழ்வை எதிர்க்க மற்றொன்று. தன்வயிற்றுப் பசிப்பிணிபோக்கும் போராட்டத்தில் வந்துபோகும் அவன்கண்ணீருக்கு
Aug 16, 2020
1 min
60. பரலோகத்தில் பாவிகள் | SINNERS IN HEAVEN
தொப்புள்கொடி அறுக்கப்பட்டு அழும்போது அப்பாவிதான்! தொட்டிலில் வாழ்வைத் தொடங்கும்போது அப்பாவிதான்! தொடக்கக் கல்வியிலேயே தொய்ந்தபோதும் அப்பாவிதான்! தொடங்கிய உயர்கல்வியோடுபோராடும்போதும் அப்பாவிதான்! தொங்கித்தொங்கி வேலைதேடிய போதும் அப்பாவிதான்! தொடர்ந்து வேலைசெய்து களைத்தபோதும் அப்பாவிதான்! தொடர்ச்சியாக அமைத்த மணவாழ்விலும் அப்பாவிதான்! தொடர்வண்டியாக பிள்ளைகள் பெற்றபோதும் அப்பாவிதான்! தொற்றிப்படர்ந்த தொல்லைகளின் போதும் அப்பாவிதான்! தொய்ந்த வாழ்வைஏற்றி நிமிர்த்தியபோதும் அப்பாவிதான்! தொடுஉணர்வு இழந்த வயோதிகத்தின்போதும் அப்பாவிதான்! தொட்டாச்சிணுங்கியாக இறுதியில்வாழ்ந்தபோதும் அப்பாவிதான்! தொண்டுசெய்ய பலரிருந்தபோதும் அப்பாவிதான்! தொந்தரவு பலதந்தாலும் உள்ளுணர்வில் அப்பாவிதான்! தொடர்ந்து அப்பாவியாக வாழ்ந்தவன்எப்படபாவியாகி அங்குநிற்கிறாய்!
Aug 16, 2020
2 min
59. விழி | EYE
அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்தத் தாமரைகள் அந்தக் கருணைவிழிகள்! ஈவோர் அரிதாகிய இவ்வுலகின்கண் இரக்கும் கருணை அளித்து இல்லது அறியாது அளவிறந்து அன்பை அள்ளித்தரும் அயிரை மீன்கள்அவை! அந்தக் கண்களில் சந்திரன் குடிகொண்டுள்ளானோ? அவைஅளிக்கும் தண்மைஎம் இதயம்தனை இதப்படுத்தும். கண்டவுடன் நம்கஷ்டத்தை அளவெடுக்கும் அந்தக்கயல்விழிகளில் என்னஅளவுகோலா இருக்கின்றது? பதப்படுத்தும் அப்பார்வைகள்தான் நம்மை பத்திரப்படுத்தும். இலக்குகொண்டு இந்தியாவில் வறுமைக்கு ஒழிப்புதரும் அந்தவிழி ஒன்றாவது விழித்தெழுந்தால் விண்ணைத்தாண்டி நம்ஏற்றம் ஏறிச்செல்லும்!
Aug 16, 2020
1 min
58. இனியபாத கைமலர்கள் | FLOWERS
சேவல்கள் கூவிட துயிலுணர்ந்தெழுந்து செம்பனித் துளிகள் சிதறும் புலர்காலை வேளை! நுண்மையான புத்தம் புதுவாழ்வுக் காலையில் தொழுவதற்குரிய புனிதக்கமலப் பாதங்கள் இவை! - எனின் தேவை இவைகளின் சேவை! இவ்வெவனம் கையேந்தா திருக்க எளியோர்தம் இதயம்தனில் வடியும் குருதி யோட்டத்தை சீராக்க, உள்ளங் கலங்கும் கண்களின் நீரைத்துடைத்து மக்களை உவகையூட்ட, கோடானுகோடி மக்களின் கண்களிட்ட கோலநீரை வாரிவெளியேற்ற வந்த-இந்த மென்மையான மலர்க் கரங்கள் முனைந்து வந்து அணைக்கும் அன்புக் கரங்கள்! வந்துநிற்கும் இவர்தம் பாதங்கள்கூட பூஜைக்குரிய இனிய பாதக் கைமலர்கள்!
Aug 16, 2020
1 min
57. விளங்காததில் வந்த வியப்பு | CONFUSED SURPRISE
எண்சாண் உடம்பின் எண்ணற்ற சினைகளையும் எழிலுறக் கற்பித்து, எகாலஜியை இனிமையாய்விளக்கி எம்பிரியாலஜியை எளிமையாக்கிய எம்ஆசானின் மூளை ஆயிரம்மலர்கள் மலர்ந்துமணம்வீசும் அற்புதசோலை. கரைபுரண்டோடும் நதிகளிலே கரைசேர்ந்த கங்கைநதி அது. ஓங்கி உயர்ந்த மலைகளிலே மாணவர்களின் கண்மலர்களை மலர்த்திநோக்க வைத்த இமயமலை இது - இங்கேயுள்ள விலங்கியலின் தொகுப்பு விஞ்ஞானிகளையும் வியக்க வைக்கும் பதிப்பு! மொத்தத்தில் இதுஒரு கன்னிமரா லைப்ரரி!
Aug 16, 2020
54 sec
56. செவி | Ear
எத்தனை பிறவி யெடுத்தாலும் அத்தனைப் பிறவிகளிலும் துள்ளாத மனதையும் துள்ளச்செய்து சொல்லாத கதைகள் சொல்லி இல்லாத ஆசையைக் கிள்ளி இன்பத் தேனையும் வென்ற-எம் இனிய மழலைத் தமிழால் மகிமைப் பெற்ற மானிடச் செவிகளிலே மகத்தானதொரு செவி நம்செவி! - தேனெனத் தீந்தமிழில் பாடும்எம் பாடலின் ஒலிகள் பாய்ந்துசெல்லும் இச்செவிகள் செவிமடுத்தஎம் சிங்கார வார்த்தை ஜாலங்களின் மகிமையும் இனிமைபெற, என்றென்றும் உம்செவிகளில் எம் நாவின் தாளங்கள் ஜதிபாடிக் கொண்டே யிருக்க வாழ்த்துகிறேன்! கேட்டமைக்கு நன்றி கோர்க்கின்றேன்!
Aug 16, 2020
49 sec
55. திசை மாறியத் தென்றல்கள் | DISTRACTED WINDS
ஓராண்டின் ஓட்டத்தில் ஓடுகின்ற ஓடங்கள்-தங்கள் ஓட்டத்தில் ஓயவில்லை. புலராத காலைப்பொழுது இக்கால ஓட்டத்தில் மலராமல் இருக்கவில்லை. சாயாத கதிரவன் காலக்கணக்கில் புலியாகச் சாய மறக்கவில்லை. பூக்காத புஷ்பச்செடிகளும் பொழுது புலர்ந்தவுடன் இதழ்விரிக்கத் தவறவில்லை. மயங்காத நாசித்துவாரத்தில் மணம்புகுத்தும் மலர் மாலையில்மலர மயங்கவில்லை. விரித்த தன்நீண்ட விரிகதிர்களை சுருக்கிகதிரவன் மடங்கத் தயங்கவில்லை. ஏடுசுமந்து சாலைசெல்லும் காலவழி அன்றும் என்றும் மாறுவதில்லை. மனஆழத்தில் மடங்கியிருந்த ஏக்கங்களும் வேதனைகளும் மாறிவிடவில்லை தன்னைமறந்து. எழுத்துக்களில் கோர்த்த கண்ணீர்வெள்ளம் எப்பொழுதும் எழுந்தோடி னதில்லை. ஏழுஜென்ம ஏதட்சனைகளும் ஏடுகளுக்கு கரைகட்டி ஏமாப்பு எழுப்பாமலில்லை. தளர்ந்த தாகம்தீர்க்கத் தண்ணீரன்றி பாலைவனச்சோலைகள் கண்முன் ஓடாமலில்லை. விரிந்த வேகம் விண்ணளவில் ஓடிமனதளவில் தளரத் தயங்கவில்லை.
Aug 16, 2020
1 min
54. கண்ணீர்க் காவியம் | Poem about Tears
கவிதை எழுத எழுதுகோலைக் கையில் எடுத்தான் கவிஞன். முள்ளில்லாத மூளியான அதன் முனையில் தன்னிதயத்தைப் பதித்தான். மையற்ற அதை நிரப்பதன் கண்ணீருக்கு கரை கட்டினான். பலம் முழுதும் பிரயோகித்துப் பழம்பறித்தும் பறித்தபழம் புளிப்பே! புளிப்பு மிகுந்ததன் வாழ்வினையும் புத்திசாலித் தனமாய் ஏடாக்கி, வழுக்கி விழுந்தச் சறுக்கல்களை, வகையாக வாழ்க்கை யாக்கி, பாராட்டி சீராட்டி தாலாட்டி வளர்த்த தமிழ்த்தாயின் மடியில் அமர்ந்தவாறு அறுதியிட்டு எல்லாம்கூற முனைந்த போதுதான் ஏற்கனவே தான்கையில் எடுத்திருந்த ஏடு நனைந்து விட்டிருந்தது தெரிந்தது! பெய்தமழையால் அல்ல சொய்தகண்ணீரால் மக்களின் கண்ணீர்க் கடலின் அலையோசை கேட்காது - ஆனால் அபலைகளின் அழுகைஒலி கேட்கும். அதிலேஒரு கண்ணீர்காவியம் பிறக்கும். இச்சகத்தில் ஒருவருக்கு உணவில்லையெனில்கூட இச்சகத்தையே அழிப்போம் என்றகவிமாறி, இச்சகத்தில் ஒருவருக்குநீதி இல்லையெனில்கூ
Aug 16, 2020
1 min
53. எல்லாம் நாங்களே | WE ARE EVERYTHING
அப்பா, காலார வெளியேசென்று உலவிவருகிறேன் எனக்கேட்டால் கரடியாகக் கத்துவதேன்? காலடிஎடுத்து வைத்தால்காலை உடைப்பேன் கழுதைஎன்பதேன்? அடுப்பங் கரைக்கும் முன்புறத்து அறைக்கும் இருமுறை போய்வந்தால் புனுகுபூனை போலவே நீ போவதும் வருவதும் ஏனோஎன அம்மா திட்டுவது ஏன்? கேள்விகள் ஏதும் போரடிக்கும்போது கேட்டால் உடன்பிறப்பு ஆத்திரமுடனே எனை பார்த்துஅடிகள் எத்தனைகிடைத்தாலும் வலிக்காதோ எனகாண்டாமிருகமாய் கத்துவதேன்? சீப்பைக் காணோம் என்றாலோ, சிடுசிடு எனதாத்தா என்னிடம் எங்கே ஒளித்தாய் குரங்கேஎன தேடாமல் தடதடவெனதவித்துக் கேட்டுக் கொண்டிருப்பதேன்? கணக்குப் போடும்ஆச்சியிடம் கருத்துடன் உதவமுன்சென்றால் உனக்கு என்னதெரியும்? கணக்கில் புலியோஎன சீறுவதுதான் எதற்கு? கரடி, காண்டாமிருகம், கழுதை, குரங்கு, பூனை, புலிஎன கிட்டத்தட்ட காட்டுமிருகம்எல்லாமே என்இல்லத்தில் என்றால் நானொன்று உங்களுக்கு சொல்கிறேன்…..
Aug 16, 2020
1 min
52. சினிமாக்களில் சிக்கனம் | THRIFT IN CINEMAS
சினிமாக்களிலும் சிக்கனமுண்டு, சினிமாத்துறையில் சிக்கனமும் சிங்கநடை போடுவதுண்டு. சிங்கத்தைக்காட்ட காட்டுக்குபோகத் தேவையில்லை, கம்ப்யூட்டரேபோதும்! தங்கநகைகள் வாங்கத்தேவையில்லை, கில்டுநகைகளே போதும்! காஸ்ட்லி ஆடைகள்தேவையில்லை. கலர்கலராய் ஜிகினாப் பேப்பர்களே போதும்! சிக்கனத்தின் சிம்மகர்ஜனை ஆடைகளிலும் ஆரவாரிக்கிறது. கோட்டும்சூட்டும் பட்டாடைகளும் பகட்டுத்துணிகளும் தேவையில்லை, கிழிந்தடவுசரும் மிஞ்சியஎஞ்சிய துண்டுத்துணிகளே போதும்! ஆடியன்ஸ்கூட்ட ஆள்தேடதேவையில்லை, ஆன்லைன் டெலிகாஸ்டேபோதும்! வசனங்கள் அதிகம்தேவையில்லை, வார்த்தைகளே போதுமானது! வசீகரமான காட்சியமைப்பிற்கு வார்த்தைச்சிக்கனம் வைக்கப்படுகிறது! சிரிப்புபஞ்சத்தை பாதுகாக்க பஞ்ச் டயலாக்களுண்டு! அயல்நாட்டு ஷூட்டிங்குப்பதில் அண்ணாநகரிலேயே செட்டிங்! நாட்டிற்கு தலைவனாகதலைவியாக தலைகெட்டு செலவுசெய்யத் தேவையில்லை!
Aug 16, 2020
1 min
Load more