
இது இந்த மகாபாரதக் கதையின் மூன்றாவது பகுதி. இதன் முதல் இரு பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும்.இந்தவாரம், கங்கை தனக்கு எட்டு பிள்ளைகள் பிறந்த கதையை மகனுக்குச் சொல்கிறாள். அவள் எதிர் பார்த்தது போலவே மன்னர் சாந்தனு அவர்களைத் தேடி அங்கே வந்துவிட்டார். பதினெட்டு ஆண்டுகள் கடந்தபின், கணவனும் மனைவியும், மகனும் தன்தையும் ஒன்று சேரும் உணர்ச்சி மிகு காட்சிகளும் உரையாடல்களும் இந்த வாரம் இடம்பெறுகின்றன. கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்தத் தொடர் பிடித்திருக்கிறதா? ரசிக்கிறீர்களா? உங்கள் உறவு, நட்புகளுடன் இதைப் பகிர்ந்துகொள்வீர்களா?#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
Aug 1
12 min

1.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம் - சொல்லாமல் விட்ட சுவடிகள்
இந்த மகாபாரத ஒலிக்கதைத் தொடர், கங்காதேவி, தேவவிரதனின் கதையுடன் சென்ற வாரம் தொடங்கியது.இந்த வாரம் கங்கை தன் பூர்வ கதையை தன் மகனுக்கு சொல்கிறாள். தான் பூமியில் பிறக்க நேரும்படி சாபம் பெற்றது, அஷ்ட வசுக்களும் வசிஷ்ட முனிவரிடம் அவ்வாறே சாபம் பெற்றது, அஷ்டவசுக்களைத் தான் தன் சிசுக்களாகப் பிறப்பித்து, அவர்களில் ஏழு பேர்களைப் பிறந்தவுடன் கொல்ல சம்மதித்தது போன்ற பழைய நிகழ்வுகளை கங்கை சொல்கிறாள். #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
Jul 25
14 min

ஒரு தொன்மையான சோழர் கோயில்... நாககண்டேஸ்வரம்.கிபி 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜேந்திரன் கட்டிய சிறிய, ஆனால் அதிசயமான கோயில். காலம் அதை மறந்தபோது, ஒரு அப்பாவி பூசாரியும், ஊரின் பழைய ரகசியங்களை அறிந்த ஒரு வயதான குரலும் அதை மீண்டும் உயிர்ப்பிக்கின்றன.கைவிடப்பட்ட கோயில் எப்படி மீண்டும் மக்கள் நிறைந்த இடமாக மாறியது? அந்தச் சிறிய கோயிலுக்குள் ஒளிந்திருக்கும் பெரிய இரகசியம் என்ன?ஊரின் நினைவுகள், பழைய கல்வெட்டுகள், மனிதர்களின் பலவீனமும் பெருமையும் ஒன்றாகக் கலந்து, உங்களை ஒரு பழங்கால உலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு கதை.To listen to full audiobook subscribe toKadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan
Jul 20
8 min

இந்த மகாபாரத ஒலிக்கதைத் தொடர், கங்காதேவி, தேவவிரதனின் கதையுடன் இந்த முதல் பகுதியில் தொடங்குகிறது.கங்கா புத்ரன் தேவவிரதனுக்கு பதினெட்டு வயது நிறைவுற்றாயிற்று. அன்று அவன் பிறந்த நாள். குருகுலக் கல்வி, ஆயுதப் பயிற்சிகளையெல்லாம் அவன் வெற்றிகரமாய் முடித்தாயிற்று. தாய் கங்கையுடன் அவன் கங்கையாற்றங்கரையில் அளவளாவுகிறான். தன் அஸ்திரத் திறமையை அன்னைக்குக் காட்டித் தருகிறான். அன்று, அவனை அவனது தந்தை சாந்தனு மகராஜாவிடம் சேர்த்துவிட்டு பூவுலகை விட்டே விடைபெறும் எண்ணத்தில் இருக்கிறாள் கங்கை. அது குறித்து தாய்-மகனுக்கு இடையே நிகழும் உணர்ச்சிகரமான உரையாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.#mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun
Jul 18
16 min

அடுத்தவாரம் முதல் வரவிருக்கும் தொடருக்கான ஓரு முன்னறிவிப்பு இது. இந்தத் தொடர், வியாச பாரதத்தின் மூலக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைவுக் கதையாகும்.மகாபாரதத்தின் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மற்றும் தார்மீகக் கோட்பாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இது எழுதப்பட்டுள்ளது.கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப எழுத்தாளரின் கற்பனைத் திறன், புதிய கதாபாத்திரங்கள், புதிய சம்பவங்கள், சுவாரசியமான உரையாடல்கள் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளன. மூலக் கதையை அறிந்தவர்கள், புதியதோர் கண்ணோட்டத்தில் மகாபாரதத்தைப் புரிந்துகொள்ளவும் சிந்திக்கவும் இப்புனைவு உதவும்.நவீன எழுத்தாளர்கள் சிலரைப் போல, மகாபாரத வில்லன்களை நல்லவர்களாகவோ, ஹீரோக்களைப் பொல்லாதவர்களாகவோ இதில் திரிக்கவில்லை.சுருக்கமாக, இது மூலக் கதையின் ஆன்மா மாறாமல், கற்பனை வளம் சேர்த்து எழுதப்பட்ட ஒரு புதிய அணுகுமுறையிலான பாரதப் புனைவாகும். இனி வாரா வாரம் தொடர்ந்து கேளுங்கள்!#mahabaratham #tamilaudiobook #mythology #deepikaarun #sandeepika
Jul 11
5 min

பிராட்வே-எஸ்பிளனேடு சந்தியில் நின்று கொண்டிருந்த கந்தசாமிப் பிள்ளைக்கு முன் ஒரு நாள் கடவுள் நேரில் தோன்றினார். காப்பிக் கடை பில் முதல் ரிக்ஷா வாடகை வரை, சித்த வைத்திய தீபிகை சந்தா வரை... பூலோகத்தின் சின்னஞ்சிறு சிக்கல்களுக்கு நடுவே, ‘பெரியப்பா’வாக வந்து அமர்ந்த அந்த அதிதியுடன் அவர் நடத்தும் உரையாடல்கள் — சிரிப்பையும், அதிர்ச்சியையும், ஆழமான சிந்தனையையும் ஒருங்கே தூண்டுகின்றன.புதுமைப்பித்தனின் கூர்மையான நகைச்சுவை மற்றும் தத்துவத்தின் அழகிய கலவையில் உருவான இந்தக் கதை உங்களை முழுவதுமாக தன்னுள்ளே இழுத்துச் செல்லும்.ஒரு சாதாரண மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கும் இந்த மறக்க முடியாத சந்திப்பைத் தவறவிடாதீர்கள்!To listen to full audiobook subscribe toKadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #Pudhumaipithan
Jul 10
10 min

பகுதி 90 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத்.15 சனாதன தர்மம் பற்றி விட்டுப் போன சில கேள்வி பதில்கள்
1. பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாம ஜபம் அல்லது பொதுவான மந்திரங்களைச் சொல்லலாமா? கோவில்களுக்குப் போகலாமா?2. கடவுளுக்கு வேண்டி உபவாசம் அதாவது உண்ணா நோன்பு ஏன் இருக்கவேண்டும்?3. ஆன்மீக வாழ்வில் மௌனம் ஏன் முக்கியமானது?4.காயத்ரி மந்திரம் பரம ரகசியமானதும் அதை பிராமணர் தவிர மற்றவர்கள் சொல்லக் கூடாது என்கிறார்களே? ஏன்? அம் மந்திரத்தின் பொருள் என்ன?5. (இது தமிழ் கோரா தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி) நான் பல நேரங்களில் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறேன், ஆனால் அந்த சமயத்தில் எதுவுமே வேண்டத் தோன்றுவதில்லை. வெளியில் வந்தவுடன் ஐயோ நாம் எதுவுமே வேண்டவில்லையே என்கிறது மனம். மற்ற நேரங்களில் பல வேண்டுதல்களும் மனதில் வருகின்றன.6. கடவுள் மறுப்பாளர்களை ஏன் வெறுக்கிறார்கள்? ஒரு கடவுளை நம்பகிறவன், அடுத்தவன் நம்பும் கடவுளை மறுப்பவன் தானே? ஏதேனும் ஒரு கடவுளை நம்பி விட்டால், அவன் ஆன்மீக வாதியாம். நம்பாவிட்டால் அவன் பாவியாம். இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிச் சொல்வதில் எத்தனை போட்டிகள்?7. பிராமணர் மட்டும் தான் இந்துமதத்தின் பாதுகாவலர்களா? அவர்களால்தான் சனாதன தர்மத்தின் ஆன்மீகமும் மதச் சம்பிரதாயங்களும் நிலைபெற்றிருக்கின்றனவா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #society
Jul 8
24 min

1. சனாதன தர்மத்தில் மக்கள் கடைப்பிடிப்பதற்காக சொல்லப்பட்டிருக்கும் தர்ம சாஸ்திரங்களில் மனுஸ்மிரிதியை பலரும் கண்டிக்கிறார்களே ஏன்?2. இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நீங்கள் ஒரு பிராமணரா? ஆமாம் என்றால், எந்த விதத்தில்?3. சனாதன தர்மமும் அது காட்டும் ஆன்மீகமும் ஒப்புயர்வற்று விளங்குவது உண்மையானால், இந்து மக்கள் ஏன் மதம் மாறினர்?4. (இது தமிழ் கோரா தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி). எல்லா மதங்களுமே இறைவன் ஒருவனே என்பதை சொல்கின்றன. ஆனால் மனித சமுதாயத்தினர் ஏன் இப்படி மதரீதியாகப் பிரிந்து தமக்குள் அடித்துக் கொள்கிறார்கள்? மிருகங்களில் இந்து சிங்கம், முஸ்லீம் புலி, கிருஸ்தவ சிறுத்தை என்று எதாவது உள்ளதா? மதம் ஏதுமில்லாத மிருகங்கள் கூட மனிதரை விட மேல் அல்லவா? 5. (இந்தக் கேள்வி, கோரா இணைய தளத்தில் கேட்கப்பட்டது.) நான் ஒரு இந்துப் பெண். நான் ஒரு இஸ்லாமியரை காதலிக்கிறேன். திருமணத்திற்கு பிறகு நான் கட்டாயமாக மதம் மாற வேண்டுமா? அப்படியே நான் மதம் மாறாமல் இருந்தாலும் என் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #society
Jun 27
17 min

1. நீங்கள் பல இடங்களில், சனாதன தர்மத்தின் படி, மோக்ஷம் தான் மனிதப் பிறவியின் குறிக்கோள் என்று சொல்லியிருக்கிறீர்கள். எதார்த்ததில் , எல்லாரும் எல்லா ஆசைகளையும் துறந்து மோக்ஷத்திற்காகப் பாடுபடுவது என்பது சாத்தியமே இல்லையே? இந்த உலக வாழ்வை வாழ்வதுதான் எப்படி?2. மோட்சத்தை அடைய துறவின் மேன்மையை மகாத்மாக்களெல்லாம் பெரிதும் வலியுறுத்தவே செய்கிறார்கள். பணம் இல்லாமல் உண்மையிலேயே வாழ முடியுமா என்ன? 3. சனாதன தர்மத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு வர்ணங்களாகிய பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்ரன் (Shudra) ஆகிய பாகுபாடுகளும், அவற்றின் தொடர்ச்சியான சாதிப் பாகுபாடுகளும் சனாதன தர்மத்தின் சாபக் கேடுகள் போல் விமர்சனத்துக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகின்றனவே? பிற மதக்காரர்கள் இதை வைத்துக்கொண்டு நம் மதத்தை இழிவு படுத்துகிறார்களே? இதற்கு எப்படி விளக்கமளிப்பீர்கள்?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும். இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #society
Jun 12
20 min

பெருநகரத்தின் தனிமை, வாட்டி வதைக்கும் வறுமை, உடலை உருக்கும் தீராத நோய்... இவற்றுக்கு நடுவே ஒரு ஆணும் பெண்ணும் எப்படி வாழ முடியும்?தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் வடித்தெடுத்த ஆகச்சிறந்த காவியம் 'செல்லம்மாள்'. கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, மின்சார வசதி கூட இல்லாத ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கும் பிரமநாயகம் பிள்ளை - செல்லம்மாள் தம்பதியரின் எதார்த்தமான வாழ்க்கைப் பயணம் இது.ஆர்ப்பாட்டமோ, கவர்ச்சியோ இல்லாத, தியாகமும் அசாத்திய புரிதலும் மட்டுமே நிறைந்த ஒரு 'காமமற்ற தூய காதலை' இதில் நீங்கள் உணரலாம். திருநெல்வேலி வட்டார வழக்கின் அழகோடும், சென்னையின் அன்றாட எதார்த்தங்களோடும் புதுமைப்பித்தன் தன் பேனாவால் செதுக்கியிருக்கும் இந்த மனித உணர்வுகளின் உன்னதக் கதை, கேட்பவர் நெஞ்சை நிச்சயம் கனக்கச் செய்யும்.To listen to full audiobook subscribe toKadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #Pudhumaipithan
Jun 5
15 min
Load more
