Show notes
தெற்கு ஆஸ்திரேலியாவில் பறவைகளிடையே பெரும் உயிரிழப்புச் சம்பவம் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியாது என்றும், குறிப்பிடத்தக்க இழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் ஃபெடரல் அரசு எச்சரித்துள்ளது. காட்டுப் பறவைகளால் ஏற்படும் தொற்று அபாயத்தைக் குறைப்பதற்காக, திறந்தவெளி முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் தங்கள் கோழிகளை அடைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



