Show notes
குழந்தைகளில் அதிகரித்து வரும் பதட்டம் (Anxiety) – குழந்தைகளின் மனநலம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், குழந்தைகளில் பதட்டம் ஏன் அதிகரிக்கிறது, அதன் அறிகுறிகள் என்ன, பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, பன்முகக் கலாச்சாரப் பின்னணி மற்றும் மனஉளைச்சல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் குழந்தை உளவியலாளர் , தற்போது ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறைத் துறையில் பணியாற்றி வரும் உளவியலாளர் ஸ்மிருதி நாயர் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் அவரோடு உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.



