Show notes
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சோகச் செய்தி நான்கு மாதக் குழந்தையின் தாயான, முப்பது வயதுடைய ஜானா ஆம்ஸ்ட்ராங் (Jana Armstrong), டூவூம்பா (Toowoomba) நகரில் காணாமல் போய், நாட்களாகத் தேடப்பட்ட நிலையில், அவரது உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில், அவரது முன்னாள் வாழ்க்கைத் துணையும், அக்குழந்தையின் தந்தையுமான, இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



