Show notes
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் கடுமையான நடவடிக்கைகளோடு மேலும் பல மாற்றங்களையும் தற்போது அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் புதிய சவால்கள் குறித்தும் எளிதாக விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.



