Show notes
NAIDOC வாரம், இந்த வருடம் ஜூலை 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. NAIDOC வாரத்தின் முக்கியத்துவம் குறித்து ஒரு நேர்காணல். Dr ராமா ஜெயராஜ் அவர்கள், சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர். உயர்கல்வியில் விரிவான அனுபவம் கொண்ட இவர், தமிழ், மற்றும் பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராயும் ஒரு சுயாதீன ஆராய்ச்சியாளரும் ஆவார். பூர்வீகக் குடிமக்கள் குறித்து அவரது ஆராய்ச்சி, கடந்த ஐம்பது வருடங்களில் அவர்களது வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்துடன் அவர் கண்ட ஒற்றுமைகள் குறித்து Dr ராமா ஜெயராஜ் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.



