Quran Circle Tamil
Quran Circle Tamil
Mansur
தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்
வியத்தகு குர்ஆன் - பகுதி 5 [ஆயத்]
ஆயா என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல்
Nov 14, 2021
10 min
வியத்தகு குர்ஆன் - பகுதி 4 [ஆயத்]
குர்ஆனின் பார்வையில் ஆயத் எதுவெல்லாம் ஆயத்?  எதுவெல்லாம் ஆயத் இல்லை?
Nov 14, 2021
8 min
வியத்தகு குர்ஆன் - பகுதி 3 [ஆயத்]
ஆயா என்றால் என்ன? ஆயாவை ‘வசனம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது? ஆயாவை வாக்கியம் என்றோ அல்லது வரி என்றோ ஏன் மொழிபெயர்க்க முடியாது? ஒவ்வொரு ஆயாவும் ஒரு வர்த்தயை விடவோ அல்லது ஒரு வாக்கியத்தை விடவோ  சிறியதாக இருக்கலாம் அல்லது பல ஆயத்துக்கள் சேர்ந்து ஒரு வாக்கியத்தை உருவாக்கலாம்  அல்லது பல வாக்கியங்கள் சேர்ந்தது கூட ஒரு ஆயத்தாக இருக்கலாம்.
Nov 14, 2021
6 min
வியத்தகு குர்ஆன் - பகுதி 2 [ஸூரா]
சூரா என்றால் என்ன? ·  குர்ஆன் 114 சூராக்களால் ஆனது ·  சூராவை ‘அத்தியாயம்’ என்று மொழிபெயர்ப்பது ஏன் தவறானது? ·  ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் மீண்டும்  மீண்டும் வராது. ·  ஒரு அத்தியாயத்தில் உள்ள செய்திகள் முந்தைய அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ·  சூராக்களைப் போல் அல்லாமல் அத்தியாயங்கள் ஒரு காலவரிசை வரிசையில் அமைந்திருக்கும். ·  அத்தியாயங்களின் வரிசையை மாற்றினால் ஒரு புத்தகம் அர்த்தமற்றுப் போய்விடும். ஆனால் சூராக்கள் அப்படியல்ல. ·  சூராக்கள் காலவரிசைப்படி வரிசைப்படுத்தப்படவில்லை. ·  குர்ஆனுக்கென்று ஒரு தனிப்பட்ட அமைப்பு உள்ளது. ·  அத்தியாயங்களின் தலைப்பு அந்த அத்தியாயத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்லும். ஆனால் ஒரு சூராவின் தலைப்பு அந்த சூரா முழுவதும் பேசப்படுவதில்லை. ·  எனவே, நீங்கள் குர்ஆனை வேறு எந்த இலக்கியங்களுடனும் ஒப்பிட முடியாது. குர்ஆனுக்கு அல்லாஹ் வகுத்த அதன் சொந்த தரநிலை உள்ளது.
Nov 7, 2021
9 min
வியத்தகு குர்ஆன் - பகுதி 1 [இலக்கியம்]
அல்குர்ஆன் ஒரு அழகிய இலக்கியம்
Nov 7, 2021
10 min
வியத்தகு குர்ஆன் - தொடர் அறிமுகம்
குர்ஆனுடைய  மொழிபெயர்ப்பைப் படிக்கும் போது  உங்களுக்குள் பல கேள்விகள் எழும்  • ஏன் குர்ஆனில் ஓரிடத்தில் சொல்லப்பட்ட செய்திகள் திரும்பத் திரும்ப மற்ற இடங்களில் வருகிறது? • ஏன் குர்ஆன் ஒரு காலவரிசைப்படி இல்லை? • ஏன்  சில அத்தியாயங்கள் சிறியதாகவும், சில நீளமாகவும் உள்ளன? • அத்தியாயங்களும் ஏன் ஒரு பொருள் வரிசைப்படி இல்லை? • குர்ஆனில் சொல்லப்படும் கதைகளும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகிறது. ஏன் ஒரு தொடராக இல்லை? இப்படி குர்ஆனை படிக்கும் போது உங்கள்  மனதில் தோன்றும் கேள்விகள் மற்ற புத்தகங்களை படிக்கும்போது  இருப்பதில்லை. ஏன்? உண்மையிலேயே இந்தக் கேள்விகளுக்கான பதில்கள்தான்  குர்ஆனை தனித்துவமாக்குகிறது மற்றும் இந்த குர்ஆன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்க்கான பதில்களைத்தான், இந்த தொடர் முழுவதும் விரிவாக கேட்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
Nov 1, 2021
5 min
அல்லாஹ்விற்காக அன்பு காட்டுதல்
அல்லாஹ்வின் அடியார்களில் சில மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்படமாட்டார்கள் என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள். அறிவிப்பவர் : உமர் பின் அல்ஹத்தாப் (ர­லி) அவர்கள் நூல் : அபூதாவுத் (3060)
Oct 31, 2021
16 min
இறந்துவிட்ட பெற்றோருக்காக செய்யக்கூடிய நன்மைகள்
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் : ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள். நூல் : புகாரி 1852
Aug 28, 2021
17 min
முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு
وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி) நூல் : முஸ்லிம்
Aug 16, 2021
14 min
ஹிஜ்ரி ஆண்டு உருவான வரலாறு - 2
உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து ‘வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?’ என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள். நூல்: ஹாகிம் (4287)
Aug 10, 2021
18 min
Load more