Show notes
ஞானப் பாடல்கள்83. ஆத்ம ஜயம் கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்கவர்ந்திட மாட்டாவோ?-அடமண்ணில் தெரியுது வானம்,அதுநம்வசப்பட லாகாதோ?எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்கிறுதியிற் சோர்வோமோ,விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்மேவு பராசக்தியே!என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்எத்தனை மேன்மைகளோ!தன்னை வென்றா லவை யாவும் பெறுவதுசத்திய மாகுமென்றேமுன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்முற்றுமுணர்ந்த பின்னும்தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்குதாழ்வுற்று நிற்போமோ?



