Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம்-29
30 minutes Posted Mar 19, 2026 at 11:00 am.
0:00
30:56
Download MP3
Show notes
பாடல் : 96
பஞ்சினை ஊழித் தீப்போல் பலசன்ம விவித வித்தாம்,
சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல் சுட்டு வெண்ணீ றாக்கும்,
கிஞ்சிதா காமி யம்தான் கிட்டாமல் விட்டுப் போகும்,
விஞ்சின பிராரத் தத்தின் வினையது பவித்துத் தீரும்.
பாடல் : 97
பொறுமையால் பிராரத் தத்தைப் புசிக்குநாள் செய்யும் கர்மம்,
மறுமையில் தொடர்ந்தி டாமல் மாண்டுபோம் வழியே தென்றால்,
சிறியவர் இகழ்ந்து ஞானி செய்தபா வத்தைக் கொள்வார்,
அறிவுளோர் அறிந்து பூசித்து அறமெலாம் கைக்கொள் வாரே.
பாடல் : 98
அரியமெய்ஞ் ஞானத் தீயால் அவித்தையாம் உடல்நீ றாகும்,
பெரியதூ லமும்கா லத்தால் பிணமாகி விழுமந் நேரம்,
உரியசூக் குமச ரீரம் உலையிரும் புண்ட நீர்போல்,
துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே.
பாடல் : 99
கடமெனும் உபாதி போனால் ககனமொன் றானாற் போல,
உடலெனும் உபாதி போன உத்தரம் சீவன் முத்தர்,
அடிமுடி நடுவும் இன்றி அகம்புறம் இன்றி நின்ற,
படிதிகழ் விதேக முத்திப் பதம் அடைந் திருப்பர் என்றும்.
பாடல் : 100
சொல்லிய மகனே எங்கும் சூழ்வெளி இருக்க மண்ணைக்,
கெல்லிய பின்பு தோன்றும் கிணற்றின் ஆ காசம் போலே,
ஒல்லையாம் பிரம நூலால் உற்றது போலே தோன்றும்,
எல்லையில் நாமெப் போதும் ஏகமென் றிருந்து வாழ்வாய்.