Show notes
பாடல் : 91 அகவாழ்க்கைசென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன்,நின்றது புசிப்பார் வெய்யில் நிலவாய்விண் விழுது வீழ்ந்துபொன்றின சவம்வாழ்ந் தாலும் புதுமையா ஒன்றும் பாரார்,நன்றுதீது என்னார் சாட்சி நடுவான சீவன் முத்தர்.பாடல் : 92 பின்னைமூ வரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம்,தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தம் தானாய்,உன்னுவோன் வரன்வேற் றோரால் உணர்பவன் வரியா னாகும்,அன்னியர் தம்மால் தன்னால் அறியாதோன் வரிட்ட னாமே.பாடல் : 93அரிதாகு மிவர்க ளிவ்வாறு அநேக ரானாலு முத்தி,சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால்,பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன்,வரியானும் வரனு மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார்.பாடல் : 94பிரமஞா னிகளும் கர்மப் பேதையர் போலே வாழ்ந்தால்,திரமுறும் அஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியே தென்றால்,பரவுமா காசம் ஒன்றில் பற்றாது மற்றை நாலும்,விரவின தோடும் கூடும் விதமிரு வோரும் ஆவார்.பாடல் : 95சீவன்முத் தரைச்சே வித்தோர் சிவன் அயன் நெடுமா லான,மூவரும் மகிழ நோன்பு முழுவதும் செய்து சன்ம,பாவன மானா ரென்று பழமறை முழங்கு மிப்பால்,மேவரும் சீவன் முத்தர் விதேகமுத் தியும்நீ கேளாய்


