Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம்- 28
38 minutes Posted Mar 12, 2026 at 11:00 am.
0:00
38:56
Download MP3
Show notes
பாடல் : 91 அகவாழ்க்கை
சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன்,
நின்றது புசிப்பார் வெய்யில் நிலவாய்விண் விழுது வீழ்ந்து
பொன்றின சவம்வாழ்ந் தாலும் புதுமையா ஒன்றும் பாரார்,
நன்றுதீது என்னார் சாட்சி நடுவான சீவன் முத்தர்.
பாடல் : 92
பின்னைமூ வரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம்,
தன்னையுற் றிருப்பார் தேக சஞ்சார நிமித்தம் தானாய்,
உன்னுவோன் வரன்வேற் றோரால் உணர்பவன் வரியா னாகும்,
அன்னியர் தம்மால் தன்னால் அறியாதோன் வரிட்ட னாமே.
பாடல் : 93
அரிதாகு மிவர்க ளிவ்வாறு அநேக ரானாலு முத்தி,
சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால்,
பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன்,
வரியானும் வரனு மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார்.
பாடல் : 94
பிரமஞா னிகளும் கர்மப் பேதையர் போலே வாழ்ந்தால்,
திரமுறும் அஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியே தென்றால்,
பரவுமா காசம் ஒன்றில் பற்றாது மற்றை நாலும்,
விரவின தோடும் கூடும் விதமிரு வோரும் ஆவார்.
பாடல் : 95
சீவன்முத் தரைச்சே வித்தோர் சிவன் அயன் நெடுமா லான,
மூவரும் மகிழ நோன்பு முழுவதும் செய்து சன்ம,
பாவன மானா ரென்று பழமறை முழங்கு மிப்பால்,
மேவரும் சீவன் முத்தர் விதேகமுத் தியும்நீ கேளாய்