Show notes
பாடல் : 56புண்ணிய பதிகன் பின்னும் புருடர்ஒன் பதின்மர் தம்மை,எண்ணும்நீ தசமன் ஆவை என்னவே தன்னைக் காணல்,கண்ணினிற் கண்ட ஞானம் கரைதல்போ வதுநோய் போதல்,திண்ணிய மனதில் ஐயம் தெளித லானந்த மாமே.பாடல் : 57தசபுமான் தனைக்கண் டாற்போல் சற்குரு மூர்த்தி யேஎன்,நிjaவடி வினையான் காண நீர்காட்டல் வேண்டும் என்றான்,சுசிபெறும் இலக்கி யார்த்தம் தொம்பதம் தத்ப தங்கட்கு,அசிபத ஐக்கியம் செய்யும் அதுசெயும் உண்மை கேளாய்.பாடல்: 58விண்ணொன்றை மகாவிண் ணென்றும் மேகவிண் ணென்றும் பாரில்,மண்ணொன்று gha டவிண் ணென்றும் மருவிய சலவிண் ணென்றும்,எண்ணும்கற் பனைபோல் ஒன்றே எங்குமாம் பிரமம் ஈசன்,நண்ணும்கூ டsத்தன் சீவன் நான்கு சைதந்யம் ஆமே.பாடல் : 59பூச்சிய ஈசன் சீவன் புகல்பதம் இரண்டி னுக்கும்,வாச்சியம் லட்சி யம்தான் மலம் இலாப் பிரமம் ஆன்மா,காய்ச்சிய பாலில் நெய்போல் கலந்தொன்றாம் கடைந்தெடுக்கும்,ஆச்சியம் என்ன உன்னை அறிந்துநீ பிறிந்து கொள்ளே.பாடல் : 60பிறிவதெப் படிஎன் றக்கால் பிணமாகும் உடல்நான் என்னும்,அறிவினைக் கொல்லல் வேண்டும் ஐம்பூத விகாரம் அன்றோ,வெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போல்உன் மூக்கால்,எறிபிரா ணனும்நீ அல்லை இராjaத குணவி காரம்.


