Atmanandalahari
Atmanandalahari
atmanandalahari
கைவல்ய நவநீதம் -20
35 minutes Posted Jan 17, 2026 at 11:08 pm.
0:00
35:37
Download MP3
Show notes
பாடல் : 51
இந்தமா யையினால் சீவர்க் கேழவத் தைகளுண் டாகும்,
அந்தவே ழவத்தை தம்மை அடைவினின் மொழியக் கேளாய்,
முந்தவஞ் ஞானம் மூடல் முளைத்தல்கா ணாத ஞானம்,
சந்ததம் கண்ட ஞானம் தழல்கெடல் குளிர்மை ஆதல்.
பாடல் : 52
பிரமமாம் தனைம றந்த பேதைமை யே அஞ் ஞானம்,
பரன் இலை காணோம் என்று பகர்தல் ஆவரணம் மூடல்,
நரனொரு கருத்தால் சீவன் நானென முளைத்தல் தோற்றம்,
குரவன்வாக் கியத்தால் தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம்.
பாடல் : 53
தத்துவ விசாரம் செய்து சகலசந் தேக மும்போய்,
அத்துவி தம்தான் ஆதல் அபரோட்ச ஞானம் ஆகும்,
கர்த்தனாம் சீவ பேதம் கழிவதே துக்கம் போதல்,
முத்தனாய் எல்லாம் செய்து முடிந்ததா நந்தம் ஆமே.
பாடல் : 54
இதுநினக் கறியும் வண்ணம் இப்படி ஒருதிட் டாந்தம்,
புதுமையாம் கதைகேள் பத்துப் புருடர்ஓர் ஆற்றை நீந்தி,
உதகதீ ரத்தில் ஏறியொருவன் ஒன் பதுபேர் எண்ணி,
அதனொடு தசமன் தான்என் றறியாமல் மயங்கி நின்றான்.
பாடல் : 55
அறியாத மயலஞ் ஞானம் அவனிலை காணோம் என்றல்,
பிறியாஆ வரணம் ஆகும் பீழைகொண் டழல்விட் சேபம்,
நெறியாளன் தசமன் உண்டு நிற்கின்றான் என்ற சொல்லைக்,
குறியாக எண்ணி நெஞ்சில் கொள்வது பரோட்ச ஞானம்.