Show notes
பாடல் : 51இந்தமா யையினால் சீவர்க் கேழவத் தைகளுண் டாகும்,அந்தவே ழவத்தை தம்மை அடைவினின் மொழியக் கேளாய்,முந்தவஞ் ஞானம் மூடல் முளைத்தல்கா ணாத ஞானம்,சந்ததம் கண்ட ஞானம் தழல்கெடல் குளிர்மை ஆதல்.பாடல் : 52பிரமமாம் தனைம றந்த பேதைமை யே அஞ் ஞானம்,பரன் இலை காணோம் என்று பகர்தல் ஆவரணம் மூடல்,நரனொரு கருத்தால் சீவன் நானென முளைத்தல் தோற்றம்,குரவன்வாக் கியத்தால் தன்னைக் குறிக்கொளல் பரோட்ச ஞானம்.பாடல் : 53தத்துவ விசாரம் செய்து சகலசந் தேக மும்போய்,அத்துவி தம்தான் ஆதல் அபரோட்ச ஞானம் ஆகும்,கர்த்தனாம் சீவ பேதம் கழிவதே துக்கம் போதல்,முத்தனாய் எல்லாம் செய்து முடிந்ததா நந்தம் ஆமே.பாடல் : 54இதுநினக் கறியும் வண்ணம் இப்படி ஒருதிட் டாந்தம்,புதுமையாம் கதைகேள் பத்துப் புருடர்ஓர் ஆற்றை நீந்தி,உதகதீ ரத்தில் ஏறியொருவன் ஒன் பதுபேர் எண்ணி,அதனொடு தசமன் தான்என் றறியாமல் மயங்கி நின்றான். பாடல் : 55அறியாத மயலஞ் ஞானம் அவனிலை காணோம் என்றல்,பிறியாஆ வரணம் ஆகும் பீழைகொண் டழல்விட் சேபம்,நெறியாளன் தசமன் உண்டு நிற்கின்றான் என்ற சொல்லைக்,குறியாக எண்ணி நெஞ்சில் கொள்வது பரோட்ச ஞானம்.

