Show notes
ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம்,ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல்,நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல்,நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல். 20இப்படிப் போன்ற நாம ரூபங்கள் இரண்டும் இன்றி,ஒப்பமாய் இரண்டற் றொன்றாய் உணர்வொளி நிறைவாய் நிற்கும்,அப்பிர மத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம்,செப்புகற் பனையி னாலே செனித்தவென் றறிந்து கொள்ளே. 21அதுதான் எப் படிஎன் றக்கால் அநாதியாம் சீவ ரெல்லாம்,பொதுவான சுழுத்தி போலப் பொருந்தும் அவ் வியத்தம் தன்னில்,இதுகால தத்து வப்பேர் ஈசன்உட் பார்வை யாலே,முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தம் ஆமே. 22

