Show notes
பாடல் :17நனவுகண் டதும்நான் கண்ட நனவுள நினைவு நீங்கிக், கனவுகண் டதும்சு ழுத்தி கண்டதும் வேறொன் றேபோல்,தினம் அனுபவிப்பது ஒக்கும் தெரியவும் இல்லை சற்றே,மனதினில் உதிக்கும் பின்னே மறைக்கும தருளு வீரே. பாடல் : 18தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டு வார்போல்,ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டு வார்போல்,தூலத்தை முன்பு காட்டிச் சூக்கும சொரூபம் ஆன,மூலத்தைப் பின்பு காட்ட முனிவரர் தொடங்கி னாரே.பாடல் :19அத்தியா ரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும்,உத்தியால் பந்தம் வீடு என்றுரைக்கும் வேதாந்தம் எல்லாம்,மித்தையாம் ஆரோ பத்தால் பந்தமாம் அபவா தத்தால்,முத்தியாம் இவ்வி ரண்டின் முந்தியா ரோபம் கேளாய்.பாடல் :20ஆரோபம் அத்தி யாசம் கற்பனை ஆவ எல்லாம்,ஒரோர்வத் துவினில் வேறே ஓரோர்வத் துலினை ஓர்தல்,நாரூடு பணியாய்த் தோன்றல் நரனாகித் தறியில் தோன்றல்,நீரூடு கானல் தோன்றல் நிற மலம் வெளியில் தோன்றல்.

