
சூடிக் கொடுத்த நாச்சியார் ஆறாவது பாசுரத்தில் இருந்து எம்பெருமானை அடையும் போது அடியவர்களை முன்னிட்டே அடைய வேண்டும் என்ற கருத்திற்கிணங்க அனைவரையும் எழுப்பி வந்து கொண்டிருக்கிறாள். இந்த பாசுரத்தின் படி ராமனுடைய புகழை பாடுபவர்கள் தனியாகவும் கண்ணனின் புகழை பாடுபவர்கள் தனியாகவும் இரு கோஷ்டியாக செல்கிறார்கள். கொக்கு வடிவில் வந்த பகாசுரனை கண்ணன் கொல்கிறான் என்று அவன் பெருமையை ஒரு சாரார் பாட பொல்லாத அரக்கரை கொன்றவன் ராமன் என மற்றொரு சாரார் பாடிக் கொண்டு பாவைக் களம் செல்கிறார்கள். கண்ணழகு மிக்க கோபிகையை எழுப்பி கூட வருமாறு அழைக்கிறார்கள். இந்த பாசுரத்தில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் திருக்குடந்தை. எம்பெருமான் சரித்திர பெருமை பாடும் இந்த பாசுரத்தின் பொருளை அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
Dec 31, 2024
11 min

வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ் என்ற பெருமை பெற்ற திருப்பாவையின் இந்த பாசுரத்தில் பத்தாவது கோபிகையை எழுப்புகிறார்கள். இதன் சிறப்பு என்னவெனில் இது வரை பார்த்த பாசுரங்களில் வெளியில் இருந்தவர்கள் தான் பேசினார்கள். இந்த பாசுரம் உரையாடலாக அமைந்துள்ளது. இது நடுநாயகமான பாசுரம். இதில் வரும் அர்த்தம் தான் திருப்பாவையின் சாரம் ஆகும். இது முக்கியமான பாசுரம் ஆகும். இதில் வரும் “நானே தான் ஆயிடுக” என்ற ஒரு வரியை தெரிவிக்கத் தான் திருப்பாவையே இயற்றப்பட்டது. இல்லாத குற்றத்தை ஏறிட்டாலும் அதனை ஒத்துக் கொள்வதே நல்ல லட்சணம் என்று இந்த பாசுரத்தில் காட்டி இருக்கிறார்கள்.இந்த பாசுரத்தில் கூறப்படும் திவ்ய தேசம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருத்தலம் ஆகும். இந்த பாசுரத்தின் பொருளை தொடர்ந்து அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
Dec 31, 2024
11 min

ஆறாம் பாசுரத்தில் இருந்து பதினைந்தாம் பாசுரம் வரை உறங்கிக் கொண்டிருக்கும் கோபிகைகளை எழுப்புகிறார்கள். இவளின் வார்த்தையை கண்ணன் மீற மாட்டான் இந்த பாசுரத்தில் இயற்கை காட்சியை வைத்து பொழுது விடிந்ததற்கான அடையாளம் கடைசியாக கூறப்படுகிறது. குவியும் ஆம்பலும், மலரும் செங்கழுநீரும் அழகாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் பொழுது விடிவதற்கான மற்ற அடையாளங்களும் அருமையாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இந்த பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் நாவன்மை உடையவள். இந்த பாசுரத்தில் கூறப்படும் திவ்ய தேசம் மாயவரத்திற்கு அருகில் இருக்கும். தேரெழுந்தூர் ஆகும். இந்த பாசுரத்தின் பொருளை தொடர்ந்து அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
Dec 31, 2024
11 min

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெரியாழ்வாருக்கு திருக்குமரியாய் அவதரித்த ஆண்டாள் தன்னை கோபிகையாக அவதாரித்து கண்ணனை குறித்து நோன்பு நோற்கிறாள். அவள் ஸ்ரீ வில்லிப்புத்தூரையே திரு ஆய் பாடியாகக் கருதுகிறாள். இந்த பாசுரத்தில் கண்ணனுடைய நண்பனாக இருக்கும் இடையன் ஒருவன் இறை கைங்கரியம் செய்யும் பொருட்டு சென்றதால் எருமைகள் தங்களது கன்றினை நினைத்து தாங்களே பால் சுரந்து இல்லத்தை பால் சேறாக மாற்றுகிறது. அத்தகு பெருமை மிக்கவனின் தங்கையை இவர்கள் எழுப்புகிறார்கள். தலையில் பனி விழ, உந்தன் தலை வாசலில் நாங்கள் வந்து நிற்கிறோம். மனதிற்கு இனியவனை நாங்கள் பாடவும் நீ எழவில்லையே. எழுந்திராய் என்று எழுப்புகிறார்கள். இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் தில்லை திருசித்திரக் கூடம் (கோவிந்த ராஜப் பெருமாள்). இந்த பாசுரத்தின் பொருளை முழுமையாக அனுபவிக்க இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
Dec 31, 2024
11 min

எம்பெருமானை ஒருவர் பற்றி விட்டால் அவர் வேறு எதையும் செய்ய வேண்டாம். நாம் நம்முடைய முயற்சியால் எம்பெருமானை அடைவது கஷ்டம். சித்தமாக இருக்கும் உபாயம் எதுவெனில் அவனைப் பற்றுவது தான். அந்த உறுதி நம்மில் இருந்தால் நம் வேறு எதுவும் செய்ய வேண்டாம். அத்தகைய சிறப்பு மிக்க ஒரு கோபிகையை, கண்ணனை நேரே பற்றியவளை வாசல் திறக்கவிட்டாலும் பரவாயில்லை; ஒரு பதிலாவது தரக் கூடாதா என்று கேட்கும் படி இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலில் கூறப்பட்டுள்ள திவ்ய தேசம் திருக்காட்கரை (திருகாகரா) என்னும் கேரள திவ்ய தேசம். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.
Dec 31, 2024
11 min

பகவான் எந்த அளவுக்கு முக்கியமோ, அவனது அடியவர்களும் அந்த அளவுக்கு முக்கியமானவர்கள். இது வரை கோபிகையின் குணத்தை சொல்லி எழுப்பியவர்கள் இந்த பாடலில் மாமன் மகள் என்று உறவு முறை கூறி ஒரு கோபிகையை விளித்து எழுப்புகிறார்கள். மணிகளால் இழைக்கப்பட்ட மாடத்தில் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ இருக்கும் இடத்தில் உறங்குபவளை கதவைத் திற என்று கூறி எழுப்புகிறார்கள். பகவத் விஷயத்திற்கு பகவானை அனுபவிக்க உறுதுணையாக இருக்கும் உறவுகளை நாம் விடக் கூடாது என்பதை உணர்த்தும் உயர்ந்த அர்த்தம் பொதிந்த இந்தப் பாடலில் நாம் காணவிருக்கும் திவ்ய தேசம் திருக்கடிகை சோளிங்கர். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.
Dec 31, 2024
12 min

இந்த பாசுரத்தில் தூக்கத்தில் குதூகலித்திருக்கும் கோபிகையை எழுப்புகிறார்கள். பொழுது விடிந்ததற்கான அடையாளமாகக் கீழ் வானம் வெளுத்து விட்டது, எருமைகள் சிறுவீடு மேயப் புறப்பட்டு விட்டன தேவாதி தேவனைக் காண எல்லாரும் சென்று கொண்டு இருக்கிறார்கள். நாமும் புறப்புட்டு செல்ல வேண்டும். எனவே அங்கு போகின்றவர்களை நாம் நிற்கச் சொல்லி இருக்கிறோம். கண்ணனால் விரும்பப்படுபவள் நீ. நீ இன்றி அவன் முகத்தை நாம் காண இயலாது. எனவே எழுந்து வா கண்ணபிரானின் புகழைப் பாடி அவனிடத்தை அடைவோம் என்று பொருள் தரும் இந்த பாசுரத்தில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம். இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.
Dec 31, 2024
12 min

இந்த பாசுரத்தில் பேய் பெண்ணே என்று விளித்து ஒரு பெண்ணை எழுப்புகின்ற னர் ஆண்டாள் மற்றும் அவள் குழுவினர். பறவைகள் கூட கண்ணன் பெயரைக் கூற வேண்டும் என்று ஆசைப்படுகிறது மற்றும் கலந்து பேசுகிறது எனும் போது நீ ஏன் இன்னும் எழுந்து கொள்ளாமல் இருக்கிறாய். மத்தினால் தயிர் கடையும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? கண்ணபிரானின் புகழைப் பாட நாங்கள் செல்லும் போது தலைவியான நீயும் வர வேண்டும் , எனவே கதவைத் திற என்று கோபிகையை எழுப்பும் இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் திவ்ய தேசம் திருவாய்ப்பாடி(திரு ஆயர்பாடி) கீசு கீசு என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் முழுப் பொருளையும் அனுபவிக்க இந்த வீடியோவை முழுவதும் காணுங்கள்.
Dec 31, 2024
12 min
Load more
