Show notes
பல தமிழ்ச் சிறுகதைகள், உலகச் சிறுகதைகள் பலவற்றையும் நினைவுபடுத்துகின்றன. நிகழ்ச்சிகள், பார்வை, சொல்லும் முறை ஆகியவைகளில் தமிழ்ச் சிறுகதைகள் உலகச் சி-றுகதைகளுக்கு ஒப்ப இருக்கின்றன. தரத்திலும் உலகக் கலைஞர்கள் பலருக்கும் ஈடு சொல்பவர்கள் தமிழ்க் கலைஞர்கள். இப்படித் தமிழ்க் கதைகள் பேசிய பல சம்பவங்களை உலகக் கதைகள் பேசி இருப்பதை நான் கண்டபோது இரண்டையும் இணைத்து எழுதுவது சுகமாக இருக்கும் என்று தோன்றியது. அதுதான் கதைமழை. - பிரபஞ்சன்


