Show notes
என்ன புத்தகம்னு சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு பிடிச்ச வண்ணம் ஒன்னு சொல்லுங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும். நீலம், பச்சை, சிவப்பு, கருப்புனு ஏகப்பட்ட வண்ணங்கள் இருக்கு இந்த உலகத்துல. ஒரு நாள் இந்த வண்ணங்கள்லாம் உலகத்துல இருந்து மாயமா மறைஞ்சு போய்ட்டா என்னாகும்? வண்ணமே இல்லாத வீடு, தொலைக்காட்சில கூட வண்ணங்கள் எதுவும் இல்லாம பழைய படங்கள் மாதிரி கருப்பு வெள்ளையா தெரியும். நாம போட்டிருக்கிற எல்லா உடைகளும் வண்ணம் இல்லாம போனா நல்லாவே இருக்காது. அப்பப்பா, வண்ணங்கள் இல்லாத உலகம் ரொம்ப கடினமா இருக்கும் இல்லையா?
இது பற்றிய புத்தகம் தான் இன்னைக்கு நான் உங்களுக்கு எடுத்திட்டு வந்திருக்கிறது. புத்தகத்தோட தலைப்பு
“எனக்கு பிடிச்ச கலரு”. இதை எழுதியவர் பஞ்சு மிட்டாய் பிரபு.


