Show notes
நிவர் புயல் காரைக்கால் - புதுச்சேரி இடையே அருகே புதன்கிழமை மாலை கரையை கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை கருத்தில் கொண்டு புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.இந்த விடுமுறையை நீட்டிப்பது பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் மாலை 4 மணியளவில் பேசிய முதல்வர் தெரிவித்தார்.புயல் கரையை கடக்கும் வரை கடலோர பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.--- Send in a voice message: https://anchor.fm/ajith-azhagesan/message



