Show notes
உங்களை சூழ்ந்து வாழும்
ஒவ்வொருவரும் தனி நபர்கள்..!
அவர்களை
குறை சொல்லி
ஒதுக்கி வைத்து
நீங்கள் ஒதுங்கி விடாதீர்கள்..!
உங்களின்
எண்ணங்களும்
செயல்களும்
வழிமுறைகளும்
பல மடங்கு பிரதிபலித்து
அவர்களை
உங்கள்மேல்
வெளிப்படுத்த வைக்கிறது..!
குறைகளையும்
குற்றங்களையும்
அவர்கள்மேல் சுமத்தி
நீங்கள்
உத்தம வேஷம் போடாதீர்கள்.!
நீங்கள்
பழி சொல்லும் அவர்கள்..
அவர்கள் அல்ல ..
உங்களின் சுயரூபம்
அவர்களை உங்களுக்கு
பிரதிபலிக்கிறது..!
உங்களை மாற்றுங்கள்..
உங்களை மேம்படுத்துங்கள்..
உங்களை உணருங்கள்..
அவர்கள் மட்டுமல்ல
உங்கள் வாழ்க்கையே
உங்களின் மனநிறைவான
மகிழ்ச்சி தரும்..!



