Kathai Solli
Kathai Solli
Kathai Solli
பூனைக்கு மணி கட்டுவது யார்? - 27வது கதை
2 minutes Posted Jan 18, 2021 at 1:01 am.
0:00
2:07
Download MP3
Show notes
பூனைக்கு மணி கட்டுவது யார்?
எலியூர் என்ற ஊர் இருந்தது. அங்கே நிறைய எலிகள் ஒன்றாக அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தன. அப்போது திடீரென்று பூனை ஒன்று ஊருக்குள் வந்துவிட்டது. நிம்மதியாக வாழ்ந்து வந்த எலிக் குடும்பங்கள் இப்போது கலங்கி நின்றன. பூனை எப்போது தன்னையோ தன் குடும்பத்தாரையோ பிடித்துத் தின்னுமோ என்று எல்லா எலிகளும் அஞ்சின.
இதற்குத் தீர்வு காண எலிசபை கூடியது. இந்தப் பூனைப் பிரச்சனைக்கு முடிவுகட்ட வழிதெரியாது சபையில் அனைவரும் திணற, அனுபவத்திலும் வயதிலும் மூத்த எலி ஒன்று முன்வந்து ஒரு திட்டத்தைச் சொன்னது.
அந்தத் திட்டத்தின்படி, தங்கள் எலிக்கூட்டத்துக்கு நண்பனான ஒரு காக்கையை பூனையிடம் தூது அனுப்பி, பூனையை ஓட்டப்பந்தப் போட்டிக்கு அழைத்தன. அந்தப் போட்டிக்கு நடுவராக ஒரு பெரிய நாயை நியமித்தன.
போட்டி நடக்கும் நாள் வந்தது. போட்டியில் ஏமாற்று வேலை செய்ய முயலவேண்டாம் என்று பூனையை அந்த நடுவாரான நாய் எச்சரித்திருந்தது.
போட்டியில் கலந்துகொள்ளும் எலிகளிடம் அந்த மூத்த எலி வந்து ரகசியமாக, “நீங்கள் போட்டியில் கலந்துகொள்வது ஜெயிப்பதற்காக அல்ல, பூனைதான் ஜெயிக்கவேண்டும். அதனால் நீங்கள் பூனையைவிட மெதுவாக ஓடவேண்டும்” என்று சொன்னது.
போட்டி ஆரம்பித்தது. மூத்த எலியின் யோசனைப்படி மெதுவாக ஓடிக்கொண்டிருந்த எலிகளை பூனை நாலு கால் பாய்ச்சலில் எளிதாக ஜெயித்தது. சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எலிக்கூட்டத்தின் முன்னேவந்து, “யாரை ஜெயிக்கப் பார்க்கிறீர்கள். எப்படி உங்களை ஜெயித்தேன் பார்த்தீர்களா!” என்று அலட்டிக்கொண்டது.
தோல்வியை ஒப்புக்கொண்ட மூத்த எலி, பூனைக்குப் பரிசாக தங்கத்தால் ஆனா ஒரு மணியை தந்தது. நடுவர் நாய் அதைப் பூனையின் கழுத்தில் மாட்டி கௌரவித்தது.
இனி பூனை எலிகளைப் பிடிக்க வரும்போது, பூனையில் கழுத்தில் உள்ள மணியின் ஓசை கேட்டு, எலிகள் தப்பித்துத் தங்கள் வளைகளில் ஒழிந்துகொள்ளலாம்.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே உண்மையில் யார் ஜெயித்தது என்று!
---
கதை மூலம்: Tinkle Double Digest #5