Kathai Solli
Kathai Solli
Kathai Solli
தன்னம்பிக்கை - 25வது கதை
1 minutes Posted Jan 1, 2021 at 3:41 am.
0:00
1:11
Download MP3
Show notes

தன்னம்பிக்கை

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதைவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்துகொள்ள முன் வந்தான். “போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டிவிடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?” என்றார்கள். அவன் சொன்னான், “ஐயா, வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும், உயிரில்லையே” என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான். என்ன அதிசயம்! கதவு சட்டெனத் திறந்து கொண்டது. ஏனென்றால், கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பல பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்றுவிடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டு விடுகிறார்கள். அனைவரும் அறிந்த ‘முயல் – ஆமை’ கதையில் முயலின் தோல்விக்கு ‘முயலாமை’யே காரணம்.

---

way2new தளத்தில் பகிரப்பட்டக் கதை