Kathai Solli
Kathai Solli
Kathai Solli
அடம்பிடித்தவள் - கதைசொல்லி - ஒரு நிமிடக்கதை
40 seconds Posted Dec 23, 2020 at 12:02 am.
0:00
0:40
Download MP3
Show notes

அடம்பிடித்தவள்  ஒருநாள் காலை, வானில் கருமேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தன. பள்ளிக்குச் செல்லும்போது குடையை எடுத்துச் செல்லுமாறு அவளுக்கு அறிவுறுத்தினாள் அம்மா. அதற்கு அவள், “மழையில் நனைந்தால் என்ன, சட்டென உடைகள் காய்ந்துபோகும். கவலை வேண்டாம், அம்மா” என்றாள். தாய் கூறியது போலவே மழை பெய்தது. அவளும் நனைந்து விட்டாள். நாள் முழுதும் ஈர உடையிலே இருந்தாள். காய்ச்சல் கண்டது அவளுக்கு. அதனால் மருத்துவரைப் பார்க்க நேர்ந்தது. அவரும் அவள் குணமுடைய பல கசப்பான மருந்துகளைத் தந்தார். தாய் கூறியதைத் தட்டியதை எண்ணி வருந்தினாள். வருமுன் காப்பதே நல்லது.

--- 

'365 Moral Stories' என்ற நூலிலிருந்து தேர்ந்த ஒரு கதையின் தமிழாக்கம்.