Show notes
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்று மனிதர்களுக்காக மாறுபட்ட மறுவப்பட்ட பழமொழி இது. ஒரு விஷயத்தை ஒரு தடவை சொன்னவுடன் அதை அறிந்து புரிந்து அதை கேட்டு அதன்படியே நடப்பவன்தான் நல்ல மனிதன்.
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு, சுவடு என்ற வார்த்தை மருவி சூடு என்றாகி விட்டது. அதாவது இதன் விளக்கம் சந்தையில் மாட்டை வாங்க நினைப்பவர்கள் தடத்தை வைத்து கவனித்து வாங்குவார்கள். அதாவது அது பதிக்கும் தடம் நன்றாக நல்ல அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும் மாட்டின் வலிமையும் உடல் நலத்தை கவனிப்பதற்காகவே இப்பழமொழி கூறி உள்ளார்கள்.

