Aadi Katril Ammiyum Nagarum Meaning :
# 'ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்' என்பது அனைவரும் அறிந்த ஒரு பழமொழி. ஆனால் ஆடிக்காற்றில் அம்மி நகருமா? ஆடி மாதத்தில் அதிவேகமாக காற்று அடித்தாலும் அம்மி இம்மி அளவுக்கும் நகராது.
# இதற்கு வேறு பொருள் உண்டு. ஆடிக்கும் முன் மாதங்கள் கோடை வெயில் வீசும் மாதங்கள்.
# சித்திரை, கத்திரி வெயில் என்பார்கள். அம்மாதங்களில் அடிக்கிற வெயிலின் தாக்கத்தால் பலருக்கு அம்மை நோய் வரும். ஆடியில் வரும் காற்றும், சாரல் மழையும் ,குளிர்ச்சியை ஏற்படுத்தி பூமியின் சூட்டை தணிக்கும்.
# அதனால் அம்மை கண்டவர்கள் முழுமை அடைந்து குணம் பெறுவார்கள். ஆடிக்கு பின் அம்மை நோய் போய்விடும்.
# அதனால்தான் 'ஆடிக்காற்றில் அம்மையும் நகரும்' என்கிறார்கள். ஆனால் அச்சொற்றொடர் திரிந்து, 'ஆடிக் காற்றில் அம்மியும் நகரும்' என்றாயிற்று. இனிமேலாவது பழமொழிகளின் சரியான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

