Show notes
பாடல்: சுப்பிரமணிய பாரதிஇசை: தினாபாடியவர்: மாலதிகண்ணன் -- என் காதலன்காட்டிலே தேடுதல்பல்லவிதிக்குத் தெரியாத காட்டில் -- உனைத் தேடித் தேடி இளைத்தேனே.சரணம் 1மிக்க நலமுடைய மரங்கள் -- பல விந்தைச் சுவையுடைய கனிகள் -- எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள் -- அங்குப் பாடி நகர்ந்துவரு நதிகள்நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள் -- எங்கும் நீளக் கிடக்கு மலைக் கடல்கள் -- மதி வஞ்சித் திடுமகழிச் சுனைகள் -- முட்கள் மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள் -- ஒரு ... திக்குத்சரணம் 2ஆசை பெறவிழிக்கும் மான்கள் -- உள்ளம் அஞ்சக் குரல்பழகும் புலிகள் -- நல்ல நேசக் கவிதைசொல்லும் பறவை -- அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்புதன்னிச்சை கொண்டலையும் சிங்கம் -- அதன் சத்தத்தினிற் கலங்கும் யானை -- அதன் முன்னின் றோடுமிள மான்கள் -- இவை முட்டா தயல்பதுங்குத் தவளை -- ஒரு ... திக்குத்



