Show notes
பாடல் : 46கேவல நிலைதோன் றாமல் கெடுத்தது பஞ்ச கோசம்,சீவனும் சகத்தும் ஆகிச் செனித்தவிட் சேபம் அன்றோ,ஆவர ணம்தா னேபாழ் அனர்த்தம்என் றுரைத்த தேதோ,மேவரும் குருவே என்று வினாவிடின் மகனே கேளாய்.பாடல் : 47தோற்றமாம் சத்தி தானும் துன்பமாம் பவமா னாலும்,ஆற்றலால் முத்தி சேர்வார்க் கனுகூலம் ஆகும் காண்நீ,ஊற்றமாம் பகற்கா லம்போல் உபகாரம் நிசியால் உண்டோ,மாற்றம்என் உரைப்பேன் மைந்தா மறைப்பது மிகப்பொல் லாதே.பாடல் : 48சுழுத்தியில் பிரள யத்தில் தோற்றம் ஆம் சகங்கள் மாண்டும்,அழுத்திய பவம்போய் முத்தி அடைந்தவர் ஒருவர் உண்டோ,முழுத்தவிட் சேபம் எல்லாம் முத்தியில் கூட்டு கிற்கும்,கொழுத்த ஆ வரணம் முத்தி கூடாமல் கெடுத்த கேடே.பாடல் : 49சுத்தியில் வெள்ளி போலத் தோன்றிய தோற்றம் ஆன,சத்தியும் பொய்யே என்றால் சத்திசா தனமா வந்த, முத்தியும் பொய்யாம் என்னின் மோகநித் திரைவி லங்கால்,நித்திரை தெளியு மாபோல் நிருவாண நிலைமெய் யாமே.பாடல் : 50இம்பரில் நஞ்சை நஞ்சால் இரும்பினை இரும்பால் எய்யும்,அம்பினை அம்பால் பற்றும் அழுக்கினை அழுக்கால் மாய்ப்பர்,வம்பியல் மாயை தன்னை மாயையால் மாய்ப்பர் பின்னைத்,தம்பமாம் அதுவும் கூடச் சவம்சுடு தடிபோல் போமே.

