Show notes
பாடல் :14என்னைத்தான் சடனா உள்ளத் தெண்ணியோ சொன்னீர் ஐயா, தன்னைத்தான் அறியா மாந்தர் தரணியில் ஒருவர் உண்டோ, பின்னைத்தான் அவர்கள் எல்லாம் பிறந்திறந் துழலு வானேன், நின்னைத்தான் நம்பி னேற்கு நிண்ணயம் அருளு வீரே.பாடல் :15இன்னது தேகம் தேகி இவன் என உணர்வான் யாவன்,அன்னவன் தன்னைத் தான் என் றறிந்தவன் ஆகும் என்றார், சொன்னபின் தேகி யார்இத் தூலம் அல்லாமல் என்றான், பின்னது கேட்ட ஐயர் பீழையும் நகையும் கொண்டார்.பாடல் :16தேகம் அல்லாமல் வேறே தேகியார் காணேன் என்றாய்,மோகமாம் கனவில் வந்து முளைத்தவன் எவன்நீ சொல்வாய்,சோகமாம் கனவு தோன்றாச் சுழுத்திகண் டவன் ஆர் சொல்வாய்,ஆகநீ நனவில் எண்ணும் அறிவு தான் ஏது சொல்வாய்.

