Show notes
பாடல் : 11அடங்கிய விருத்தி யானென் றறிந்தபின் செறிந்த மண்ணின்,குடம்பையுட் புழுமுன் னூதும் குளவியின் கொள்கை போலத்,தொடங்கிய குருவும் ஆன்ம சொரூபமே மருவ வேண்டி, உடம்பினுள் சீவ னைப்பார்த் துபதேசம் ஓது வாரே.பாடல் : 12வாராயென் மகனே தன்னை மறந்தவன் பிறந்தி றந்து,தீராத சுழற்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப், பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம், ஆராயும் தன்னைத் தானென் றறியும் அவ் வளவுந் தானே.பாடல் : 13தன்னையும் தனக்கா தாரத் தலைவனை யும்கண் டானேல், பின்னையத் தலைவன் தானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்,உன்னைநீ அறிந்தா யாகில் உனக்கொரு கேடும் இல்லை, என்னைநீ கேட்கை யாலே ஈதுப தேசித் தேனே.


